꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
571 views • 4 days ago
#🌎பொது அறிவு #🤔தெரிந்து கொள்வோம்
பார்வை மங்குறதுக்குள்ள பிள்ளைங்க மனசுல இந்த உலகத்தையே நிரப்பிடணும்னு நினைச்ச பெற்றோர்!
கனடாவை சேர்ந்த எடித் லேமே - செபாஸ்டியன் தம்பதிக்கு 4 பிள்ளைங்க. அதுல 3 பிள்ளைங்களுக்கு Retinitis Pigmentosa-ன்னு சொல்லப்படுற ஒரு அரிய மரபணு கண் கோளாறு இருக்குறது தெரிய வந்துச்சு. இது வந்தா கொஞ்சம் கொஞ்சமா பார்வை முழுசா போயிடும்-னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க.
அந்த வார்த்தையை கேட்டதும் அந்த அம்மா அப்பாவுக்கு உலகமே இருண்டு போன மாதிரி இருந்துச்சு. ஆனா உட்கார்ந்து அழுதுட்டு இல்ல. ஒரு பெரிய முடிவு எடுத்தாங்க.
"பார்வை இருக்குற வரைக்கும் நம்ம பிள்ளைங்க கண்ணுல அழகான விஷயங்களை மட்டுமே நிரப்பணும்"
அதுக்காக 2023-ல இருந்து தங்களோட வேலை, வீடு எல்லாத்தையும் விட்டுட்டு பிள்ளைங்களை கூட்டிட்டு உலக பயணத்தை ஆரம்பிச்சுட்டாங்க. ஆப்பிரிக்காவுல யானைகளை பாக்குறது, கடல்ல நீச்சல் அடிக்கிறது, வானத்துல வானவில்லை பாக்குறது, பல நாட்டு மக்கள், கலாச்சாரம்-னு பிள்ளைங்க நினைவு முழுக்க அழகான காட்சிகளா சேர்த்துட்டு வர்றாங்க.
கண்ணு தெரியாம போனாலும், மனசுக்குள்ள இந்த உலகம் எப்பவும் அழகாவே இருக்கும்னு அந்த பெற்றோர் நம்புறாங்க. இதுதான் உண்மையான பெற்றோர் பாசம்.
#InspiringParents #FamilyLoveStory #WorldTravelDiaries #EmotionalRealLife
6 shares