Arab Tamil Daily
523 views • 11 days ago
குவைத்தில் இந்தியர் உட்பட இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்:
குவைத்திலுள்ள ஜஹ்ரா மாகாணத்தின் கப்த்(Kabd) பகுதியில் ஈரானியர் மற்றும் இந்தியர் உட்பட இருவரை திட்டமிட்டு கொலை செய்த பிறகு நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற எகிப்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, குவைத்தின் தரைவழி எல்லை ரட்கா(Ratqa) வழியாக தப்பிக்க முயன்ற நிலையில் பாதுகாப்புப் படையினரிடம் அவன் பிடிபட்டுள்ளான் என்ற செய்தியினை இன்று(09/08/2026) நள்ளிரவில் உள்துறை வெளியிட்டுள்ளது.
கப்த் பகுதியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் இருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து இந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கத்திக்குத்துக்கு ஆளாகி உயிரிழந்த நிலையில் கிடந்த இருவருடைய உடலை கண்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரிய அளவிலான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டது. குற்றவியல் புலனாய்வுத்துறையின் சிறப்புப் பிரிவினர் குற்றவாளியைக் கண்டறிய விரிவான தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, ஆதாரங்களைச் சேகரித்து, கொலை தொடர்பான நிகழ்வுகளைத் தொகுத்து ஆராய்ந்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம்(கத்தி) சம்பவ இடத்திற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது. இது இவ்வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், குற்றவாளி அடையாளம் காணவும், நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் முடிந்தது. தரைவழி எல்லைப் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், குவைத்தை விட்டு தப்பிக்க முயன்றபோது ரட்கா பகுதியில் வைத்து குற்றவாளி பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டார். குற்றவாளி தப்பிச் செல்லும் முன்பே கைது செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரட்டைக் கொலைக்கான சூழ்நிலைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இந்தியர் தொடர்பான கூடுதல் விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. வரும் மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
11 shares