k.R
778 views 19 hours ago
இன்று ஆடிப்பூரம் 🙏 #🪷ஆடி பூரம்🌟 #🪔 ஆடி ஐந்தாம் வெள்ளி 🕉️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌸 ஆடி மாத ஸ்டேட்டஸ்🙏 #🛕ஆடி மாத வழிபாடு🔔 🔥🔱🙏🏾#ஆடிப்பூரம்_நாளில்_அம்மனுக்கு செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு🌹🌹🌹K. R🌹🌹🌹🙏 🙏🏾#ஆடி_மாதத்தில்_வரும்_பூர நட்சத்திர நாள் ஆடிப்பூரம் என அழைக்கப்படுகிறது. ஆன்மிக ரீதியாக இந்நாள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 🙇🏾‍♂️💃🏾👍🏾"#பெண்மை_போற்றப்படும்_ஆடி_மாதத்தில், 🙇🏾‍♂️🙏🏾#அன்னை பார்வதி #தேவியும்_ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்த அற்புத நாள் ஆடிப்பூரம்! வம்ச விருத்தியையும், நீண்ட ஆயுளையும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும் அள்ளித் தரும் இந்த புனித நாளில், அம்பிகையின் அருள் மழையில் நனைய எளிய வழிபாட்டு முறைகளும் அபார பலன்களை விளக்கமாக பார்கலாம்...🙏🏾 🔥🔱🙏🏾#ஆடி_மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாள் ஆடிப்பூரம் என அழைக்கப்படுகிறது. ஆன்மிக ரீதியாக இந்நாள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலக உயிர்களைக் காக்கும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான பார்வதி தேவி அவதரித்த திருநாளாகவும், திருமாலையே தனது பக்தியால் கட்டிப்போட்ட ஆண்டாள் நாச்சியார் பூலோகத்தில் அவதரித்த நாளாகவும் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. 🙇🏾‍♂️🔥🙏🏾 #ஆடிப்பூரம்_நாளில் அம்பிகையை இல்லத்திலும் கோயிலிலும் மனமுருகி வழிபடுவது சிறப்பானது எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து அர்ச்சகர் ஆனந்த சுரேஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். 🔥🙇🏾‍♂️🔱🕉️ #ஆடிப்பூரம்_நாளன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். பின்னர், அம்பாளின் படத்தை வைத்து சிவப்பு நிற அலரி, மல்லிகை அல்லது தாமரை மலர்களால் அலங்கரித்து, அகல் விளக்கேற்றி வழிபடலாம். ஆடிப்பூர வழிபாட்டில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அம்பாளுக்கு பச்சை நிற பட்டாடை அணிவித்து, கண்ணாடி வளையல்கள் சாற்றி வழிபடலாம். 🔱🔥#அம்மனுக்கு_சர்க்கரைப் பொங்கல், பாயாசம், எலுமிச்சை சாதம் அல்லது புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடலாம். குறிப்பாக, குழந்தை பாக்கியம் வேண்டி ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபடும் பெண்கள், அம்மன் பாதத்தில் வைக்கப்பட்ட முளைகட்டிய பச்சைப் பயிரை பிரசாதமாகப் பெற்று பக்தியுடன் உட்கொள்வது பல இடங்களில் பின்பற்றப்படும் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இதன் மூலம் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். வழிபாடு நிறைவடைந்த பிறகு, அம்மனுக்குச் சாற்றப்பட்ட கண்ணாடி வளையல்கள் மற்றும் தாம்பூலத்தை, அதாவது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கி அவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம். ஆடிப்பூரம் நாளில் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதம் பெறுவதன் மூலம் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்றும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும் என்றும் கூறுகின்றனர். .🙏🏾 🙇🏾‍♂️🙏🏾#நீண்ட_காலமாக_குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் சாற்றி, பின்னர் அந்த வளையலைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொள்வதன் மூலம் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும் என்றும், குடும்பத்தில் நிலவும் எதிர்மறைச் சூழல்கள் விலகி மகிழ்ச்சியும், அமைதியும், செல்வ வளமும் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. தாய்மை உணர்வின் வடிவமாகத் திகழும் அம்பிகையை ஆடி மாதத்தின் பூர நட்சத்திர நாளில் வளையல் சாற்றி வழிபட்டு, அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்... 🙇🏾‍♂️🙏🏾#ஓம்_சக்தி_பராசக்தி 🔥 🌹🌹🌹🌹❣️K.R❣️🌹🌹🌹🌹🙏🙏🙏
9 likes
17 shares

More like this