S.ANTHONY✝️YESUMARY
1K views 3 days ago
நீர் இல்லை. தானாக வளரும் செடியின் அற்புதம்!* உக்ரைன் நாட்டின் ஒடேசா மாகாணத்தில், சராதா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான குலேவ்சா, கடந்த சில ஆண்டுகளில் உக்ரைன், மால்டோவா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலமான புனிதத் தலமாக மாறியுள்ளது. குலேவ்சாவில் உள்ள புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெறும் அற்புதங்களைத் தங்கள் கண்களால் காண்பதற்காக, தினமும் ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெறும் அற்புதங்கள் அனைத்திலும், பார்ப்போருக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்துவது அங்குள்ள ஒரு மாதா படமே ஆகும். கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இந்த அழகிய மாதா படம், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறுக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை அன்று, மக்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் இருந்து லில்லித் தண்டுகளைக் கொண்டு வருகிறார்கள். அவை ஆசீர்வதிக்கப்பட்ட பின்னர், கண்ணாடிப் பெட்டி திறக்கப்பட்டு, பழைய மலர்கள் அகற்றப்பட்டு, அவற்றிற்குப் பதிலாக புதிய லில்லித் தண்டுகள் உள்ளே வைக்கப்படுகின்றன. காலப்போக்கில், வெட்டப்பட்ட தண்டுகளின் கீழ்பகுதிகள் உலர்ந்து விடுகின்றன. ஆனால், மேல்பகுதிகள் தொடர்ந்து வளர்ந்து, தேவமாதாவின் திருமுகத்தைச் சுற்றி ஒரு கிரீடம் போல வளைந்து, மொட்டுகளை உருவாக்குகின்றன. அந்த மொட்டுகள் மூவொரு கடவுள் பெருவிழா நாளில் மலர்கின்றன. நீர் இல்லாமல், மண் இல்லாமல், வேறு எந்த ஆதாரமும் இல்லாமல், வெட்டப்பட்டு காய்ந்து போன தண்டுகள் வளர்ந்து புதிய மொட்டுகளை உருவாக்கும் புதுமை இங்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இது விஞ்ஞானத்தால் விளக்க முடியாத மாபெரும் அற்புதம். அதன் பின்னர், தண்டுகளின் உலர்ந்த கீழ்ப்பகுதியில் இருந்து சிறிய கிழங்குகளும் (small white tubers), புதிய பச்சை இலைகளும் வெளிவருகின்றன. அந்த இலைகள் அடுத்த ஈஸ்டர் வரை, ஒரு முழு ஆண்டும் வாடாமல் இருக்கின்றன! திருநாட்களின் தேதி மாறினாலும், அந்த மலர்கள் எப்போதும் அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றன. இந்த அற்புதத்தை அறிவியலால் விளக்க பலர் முயற்சி செய்து தோல்வியடைந்தனர். ஒடேசா மெக்னிகோவ் தேசியப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவைச் (Odessa I.I. Mechnikov National University Botanical Garden) சேர்ந்த தாவரவியலாளர் அலெக்ஸாண்ட்ரா ஸ்லியுசரென்கோ (Олександра Слюсаренко) மற்றும் இளநிலை ஆய்வாளர் சினைடா கோடிகோவா (Зинаида Котикова) ஆகியோர் இதனை ஆய்வு செய்தனர். ஆனால், விரிவான ஆய்வுக்குப் பிறகும், மண், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், முற்றிலும் உலர்ந்த தண்டுகளில் உயிருள்ள லில்லி கிழங்குகள் எவ்வாறு உருவாயின என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை. ரஷ்யாவின் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய விஞ்ஞானியான திமித்ரி திமித்ரியேவிச் கோஸ்ஸே (Дмитрий Дмитриевич Госсе), மண் அறிவியல் மற்றும் சூழலியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளராக (soil scientist–ecologist), இந்த நிகழ்வை ஆய்வு செய்தார். மாதாவின் படத்தில் லில்லிப் பூக்கள் வைக்கப்படும்போது, அவை தண்டுகளோடு மட்டுமே வைக்கப்படுகின்றன. தண்ணீரையும் ஊட்டச்சத்துக்களையும் சேமித்து வைக்கும் உறுப்பு (கிழங்கு) இல்லாத நிலையில், லில்லி செடி நீண்ட காலம் வாழ முடியாது; அது இறந்து விடும். இந்நிலையில், தண்டுகளிலிருந்து புதிய லில்லி மலர்கள் தோன்றுவது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்கிறார் அவர். இந்த அதிசயம் கீவ் நகரத்தைச் சேர்ந்த உயிரியல் அறிஞர் மரியா போல்ஷகோவா அவர்களையும் கவர்ந்தது. கீவ் மற்றும் ஒடேசா நகரங்களின் தாவரவியல் பூங்காக்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்வை ஆய்வு செய்து வருகின்றனர். சில லில்லி தண்டுகளை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். மற்றவற்றை ஆலயத்தில் உள்ள ஏனைய படங்கள் மீது வைக்கின்றனர். அவர்களுடைய ஆய்வுக் கூடத்தில் தண்டுகள் பூப்பதில்லை. புனித நீக்கிலார் ஆலயத்தில், அதுவும் அந்த குறிப்பிட்ட மாதா படத்தில் மட்டும் தான், உலர்ந்த தண்டுகளில் இருந்து லில்லிப் பூக்கள் பூக்கும் அதிசயம் நடைபெறுகிறது. இங்கே ஏமாற்றுவதற்கு இடமில்லை. லில்லி மலர்கள் மக்களால் அவர்களுடைய வீடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. படத்தில் வேறு எதுவும் இல்லை. மக்கள் அருகில் சென்று பார்க்கலாம். இந்த மாபெரும் அற்புதம் மக்களின் கண்களுக்கு முன்னால் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. குலேவ்சாவில் உள்ள புனித நீக்கிலார் ஆலயத்தில் வேறு பல புதுமைகளும் நடைபெறுகின்றன. நம்பிக்கையோடு இங்கு வந்து பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆலயத்தில் நடந்த புதுமைகள் எழுதப்பட்ட ஒரு புத்தகமும் அங்கு உள்ளது. மகா வணக்கத்திற்குரிய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். சக்தி உடையவளாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
17 likes
14 shares

More like this