• 1291 shares
More like this
- ⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆🌹🌹கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். 6 ******************************************* 🚩தயிர் கடையும் வரை, நீ ஆடணும் கண்ணா. ஒருநாள், யசோதை தயிர் கடைந்து கொண்டு இருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதை யின் அருகிலேயே படுத்திருந்தார் ஸ்வாமி. அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில் லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டி பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்கு தா'’ என் று வாயைத் திறந்து கேட்கவு ம் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன். ‘‘அம்மா, இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும் கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றி சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான். யசோதை சிரித்தாள். ‘தயிர் கடைந்தால் வருவ து வெண்ணெய் என்று தெரியாத வன் போல் கேட்கிறானே கண்ணன்!’ என்று நினைத்த அவள், ‘‘கிருஷ்ணா! இது ஒரு மாதிரி பூதம். சில நேரம் தயிர்ப் பானையிலும் தோன்றும். கண்ணா. இங்கே பக்கத்தில் நிற்காதே. தூர மாகப் போய்விடு!’’ என பதில் சொன்னாள். கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை 'நாம் சாதுரிய மாகக் கேட்கிறோம் என்றா ல், அதற்கும் மேலாக பதில் சொல்கிறா ளே' என எண்ணிய ஸ்வாமி மேலும் தொடர்ந்தார். ‘‘அம்மா அது பூதம் என்றால் ஆளை விழுங் கி விடாதா? நீ மட்டும் அதன் பக்கத்தில் இருக்க லாமா? அது உன்னை விழுங்கி விட்டால், நான் என்ன செய்வேன்? அந்த பூதம் நம்மை விழுங் குவதற்குள் அதை எடுத்து என் கையில் கொடு த்து விடு. நான் விழுங்கிவிடுகிறேன். நாம் இருவரு மே தப்பிக்கலாம்!’’ என்றான் சின்ன கண்ணன். ‘இத்தனூண்டு வெண்ணெய்க் காக இப்படிக் கெஞ்சுகிறானே குழந்தை!’ என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லை யசோதைக்கு. ஒரு நிபந்தனை போட்டாள். ‘‘இதோ பார் கண்ணா, நான் தயிர் கடைந் து முடியும்வரை நீ ஆடினால் வெண்ணெ ய் தருவேன். இடக் கையால் மத்துக் கயிற் றை இழுக்கும்போது, நீ இடக்காலைத் தூக்க வே ண்டும். நான் வலக் கையால் இழுக்கும் போது, உன் வலக் கால் மேலே இருக்க வேண்டும். மாற்றி மாற்றி இப்படி தாளம் தப்பாமல் ஆடி னால் வெண்ணெய் தருவேன்!’’ என்றாள் யசோதை. அகில உலகங்களையும் ஆட்டி வைக்கும் ஸ்வாமி, யசோதை போட்ட நிபந்தனைப் படியே ஆடினான். ‘குழந்தைக்குக் கால் நோகுமே’ என்ற எண்ணம் இல்லாதவளைப் போல, யசோதை தன் போக்கில் வேகவேகமாகக் கடைந்து கொண்டிருந்தாள். அந்த வேகத்துக்கும் ஈடு கொடுத்து ஆடினான் கண்ணன். அவன் கால்களை மாற்றுவது கண்ணுக்கு தெரியவில்லை. எப்போதும் ஒரு கால் உயரத் தூக்கியபடி யே தெரிந்தது வியர்க் க, விறுவிறுக்கக் கண்ணன் ஆடிய அந்த நாட்டியத்துக்கு அபூர்வமான ஒரு பெயரைச் சூட்டினார்க ள் மகான்கள். கண்ணன் ஆடியது பரத நாட்டியமோ, கதகளி யோ, குச்சுப்புடியோ, மணிபுரியோ அல்ல. அண்ட சராசரங்களை ஆட்டிப் படைக்கும் ஸ்வாமி, ஒரு கை வெண்ணெ ய்க்காக ஆடியதை ‘நவநீத நாட்டியம்’ என்கிறார்கள். யசோதை கடைந்து முடித்தாள். ஸ்வாமியு ம் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, கோயிலில் பிரசாதத்தை எதிர்நோக்கும் பக்தனைப் போல, யசோதையின் முகத்தையே பார்த் து கொண்டி ருந்தான். ‘ஒரு யானைத் தலை அளவுக்கு வெண்ணெய் தருவாள் அம்மா!’ என்ற எதிர்பா ர்ப்பு.யசோதையோ ஒரு கடுக்காய் அளவுக்குச் வெண்ணெய் உருண்டையுடன் கண்ணனை நெருங்கினாள். அதற்குள் ஸ்வாமி ஒரு தந்திரம் செய்தார். ‘அதை, குறைந்த பட்சம் இரண்டு கடுக்கா ய் அளவுக்காவது ஆக்கிவிடலாம்!’ என்ற எண்ண த்தில் ஒரு தூணின் பக்கத்தில் போய் நின்றார் அந்தத் தூண் அவ்வப் போது வெண்ணெய்க் கையைத் தடவித் தடவி, கண்ணாடியாய் பளபளத்தது. அதில் தெரிந்த வடிவத்தையும் சேர்த்து, இரண்டு கண்ணன் நிற்பதைப் போல இருந்தது. ‘இரண்டு கண்ணனுக்கு இரண்டு வெண்ணெய் உருண்டை களை கொடுப்பாள் யசோதை..’ என்பது ஸ்வாமியின் எண்ணம். கண்ணனுக்கு இவ்வளவு இருந்தால், அவனை வளர்த்து அவன் லீலைகளை எல்லாம் அனுப விக்கும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு எவ்வ ளவு இருக்கும்? கண் ணனின் லீலையில் தன்னை மறந்தாள் யசோதை. ‘நமக்கு இரண்டு கண்ணன்க ள் போலிருக்கிறது. இந்த இருவரு க்குமே வெண்ணெய் தர வேண்டும்’ என நினைத் தாள். ‘ஆஹா! நமக்குத்தான் வெற்றி!’ என சந்தோஷப்பட்ட கண்ணன் ஆசையாகக் கை நீட்டினார். எதிர்பாராத காரியம் செய்தாள் யசோதை. தன் கையில் வைத்திருந்த கடுக்காய் அளவு வெண்ணெயை இரண்டு பங்காக் கி, அதை இருவருக்கும் கொடுத்தாளாம். 🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்... 🌹29.08.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🪔 கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பரிகாரங்கள் 🌺 #🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #🙏கிருஷ்ணா #🌻🌻காலை வணக்கம்🌻🌻4345
- ᴛᴏᴍ & ᴊᴇʀʀʏ#🦚 கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🪷 #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🪷 கிருஷ்ண ஜெயந்தி ஸ்டேட்டஸ் 🦚 #💞 ராதா–கிருஷ்ணா காதல் கவிதைகள் 🦚 #🦚 ஸ்ரீ கிருஷ்ணா லுக் 💛922
- 🦋𝆺𝅥͢܅𝐒𝐊།͢🩷ᥫᩣ#🥣 கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி🧀 #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #📸இயற்கை போட்டோ #🪔 கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பரிகாரங்கள் 🌺1916
- 💛✨#✨பகவான் கிருஷ்ணரின் போதனைகள்📜 #🙏✨பிரபஞ்சம்🌏✨🙏 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️1K1K
- 🌹A p s🌹Family 💖#கிருஷ்ண லீலை❤ #எம் பெருமான் 🙏 சிவ பெருமான் 🙏🔥10K5K
- 💛✨#✨பகவான் கிருஷ்ணரின் போதனைகள்📜 #🙏✨பிரபஞ்சம்🌏✨🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #தெரிந்து கொள்வோம் #👌அருமையான ஸ்டேட்டஸ்1K894
- 🦋𝆺𝅥͢܅𝐒𝐊།͢🩷ᥫᩣ#💖நீயே என் சந்தோசம்🥰 #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🤝நேர்மையான துணை👫315
- Ravi#🦚 கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🪷 #🪔 கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பரிகாரங்கள் 🌺 #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🦚 பகவான் கிருஷ்ணரின் போதனைகள் 🪷1012
- RamaswamyAnnamali#🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🦚 பகவான் கிருஷ்ணரின் போதனைகள் 🪷 #🦚 பகவான் கிருஷ்ணரின் போதனைகள் 🪷 ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் பிறப்பை போற்றி கொண்டாடும் ஒரு அற்புதமான திருநாளாகும். நாம் தர்மத்தின் வழியில் நடந்தால் நம்மை காப்பதற்காக பகவான் கிருஷ்ணர் மீண்டும் அவதாரம் எடுத்து வருவார். பக்தியுடனும் தூய அன்புடனும் வழிபடும் பக்தர்களின் குறைகளை ஏதாவது ஒரு வடிவில் வந்து தீர்ப்பார் என்பதை உணர்த்துவதற்காகவே ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து வழிபட முடியாவிட்டாலும் 5 முக்கியமான விஷயங்களை செய்தாலே கிருஷ்ணரின் அருளை பெற முடியும். மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில், நள்ளிரவு நேரத்தில் மதுராவில் உள்ள சிறையில் அவதாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனால் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ணரை வழிபட வேண்டும். நிஷித கால பூஜை நேரமான இரவு 11.57 முதல் அதிகாலை 12.43 வரையிலான நேரத்தில் கிருஷ்ணரை வழிபடுவதும் மிகவும் விசேஷமானதாகும். கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின் போது 5 முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக செய்வதால் கிருஷ்ணரின் அருளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருக்க முடியா விட்டாலும், இந்த 5 விஷயங்களை மறக்காமல் செய்வது சிறப்பு. கிருஷ்ண ஜெயந்தி அன்று மறக்காமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் : 1. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாளான செப்டம்பர் 03ம் தேதியான வியாழக்கிழமை அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கிருஷ்ணரின் படம் அல்லது சிலையை துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும். 2. கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில் பச்சரிசி மாவு கரைசலால் வீட்டு வாசலில் இருந்து, பூஜை அறை வரை சின்னஞ்சிறு குழந்தையின் பாதம் போன்று "கிருஷ்ணர் பாதம்" கோலம் வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே நமது வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதாக ஐதீகம். 3. மஞ்சள் நிற மலர்கள் அல்லது எந்த மலர் கிடைக்கிறதோ அவற்றைக் கொண்டு கிருஷ்ணரை அலங்காரம் செய்ய வேண்டும். அவற்றுடன் கட்டாயமாக இரண்டு துளசி இலைகளைச் சாற்றி வழிபட வேண்டும். கிருஷ்ணரின் படம் அல்லது சிலைக்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். 4. கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், அவல் பாயாசம் அல்லது பால் சோறு ஆகியவற்றை கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். வரலட்சுமி நோன்பிற்கு கலசத்தில் பயன்படுத்திய அரிசியை கொண்டு நெய்யாமல் செய்யப்பட்ட முறுக்கு, சீடை போன்ற பலகாரங்களையும் நெய் கலந்து செய்து படைக்கலாம். பூஜை முடிந்ததும் பிரசாதத்தை முதலில் ஏதாவது சிறு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். இதனால் கிருஷ்ணரே நேரில் வந்து உண்பதாக ஐதீகம். 5. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், ஸ்ரீ கிருஷ்ண சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை, கிருஷ்ண லீலைகள் குறித்த கதைகளை இந்த நாளில் கேட்பதும், படிப்பதும் மிகவும் சிறப்பான பலன்களை தரும். யாரெல்லாம் விரதம் இருக்கலாம்? கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை வரம் வேண்டி வெகு காலமாக காத்திருப்பவர்கள் சந்தான கோபால கிருஷ்ணரை மனதார வேண்டி, உபவாசமாக விரதம் இருக்கலாம். மற்றவர்கள் முழு உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த நாளில் சாத்வீக உணவுகளை சாப்பிட்டு, மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து, அவரது மனம் மகிழும் படி பூஜைகள் செய்து வழிபாடு செய்திட வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.86
- 💛✨#✨பகவான் கிருஷ்ணரின் போதனைகள்📜 #🙏✨பிரபஞ்சம்🌏✨🙏 #தெரிந்து கொள்வோம் #👉வாழ்க்கை பாடங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ்90239