🌹🌹கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். 6 ******************************************* 🚩தயிர் கடையும் வரை, நீ ஆடணும் கண்ணா. ஒருநாள், யசோதை தயிர் கடைந்து கொண்டு இருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதை யின் அருகிலேயே படுத்திருந்தார் ஸ்வாமி. அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில் லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டி பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்கு தா'’ என் று வாயைத் திறந்து கேட்கவு ம் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன். ‘‘அம்மா, இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும் கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றி சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான். யசோதை சிரித்தாள். ‘தயிர் கடைந்தால் வருவ து வெண்ணெய் என்று தெரியாத வன் போல் கேட்கிறானே கண்ணன்!’ என்று நினைத்த அவள், ‘‘கிருஷ்ணா! இது ஒரு மாதிரி பூதம். சில நேரம் தயிர்ப் பானையிலும் தோன்றும். கண்ணா. இங்கே பக்கத்தில் நிற்காதே. தூர மாகப் போய்விடு!’’ என பதில் சொன்னாள். கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை 'நாம் சாதுரிய மாகக் கேட்கிறோம் என்றா ல், அதற்கும் மேலாக பதில் சொல்கிறா ளே' என எண்ணிய ஸ்வாமி மேலும் தொடர்ந்தார். ‘‘அம்மா அது பூதம் என்றால் ஆளை விழுங் கி விடாதா? நீ மட்டும் அதன் பக்கத்தில் இருக்க லாமா? அது உன்னை விழுங்கி விட்டால், நான் என்ன செய்வேன்? அந்த பூதம் நம்மை விழுங் குவதற்குள் அதை எடுத்து என் கையில் கொடு த்து விடு. நான் விழுங்கிவிடுகிறேன். நாம் இருவரு மே தப்பிக்கலாம்!’’ என்றான் சின்ன கண்ணன். ‘இத்தனூண்டு வெண்ணெய்க் காக இப்படிக் கெஞ்சுகிறானே குழந்தை!’ என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லை யசோதைக்கு. ஒரு நிபந்தனை போட்டாள். ‘‘இதோ பார் கண்ணா, நான் தயிர் கடைந் து முடியும்வரை நீ ஆடினால் வெண்ணெ ய் தருவேன். இடக் கையால் மத்துக் கயிற் றை இழுக்கும்போது, நீ இடக்காலைத் தூக்க வே ண்டும். நான் வலக் கையால் இழுக்கும் போது, உன் வலக் கால் மேலே இருக்க வேண்டும். மாற்றி மாற்றி இப்படி தாளம் தப்பாமல் ஆடி னால் வெண்ணெய் தருவேன்!’’ என்றாள் யசோதை. அகில உலகங்களையும் ஆட்டி வைக்கும் ஸ்வாமி, யசோதை போட்ட நிபந்தனைப் படியே ஆடினான். ‘குழந்தைக்குக் கால் நோகுமே’ என்ற எண்ணம் இல்லாதவளைப் போல, யசோதை தன் போக்கில் வேகவேகமாகக் கடைந்து கொண்டிருந்தாள். அந்த வேகத்துக்கும் ஈடு கொடுத்து ஆடினான் கண்ணன். அவன் கால்களை மாற்றுவது கண்ணுக்கு தெரியவில்லை. எப்போதும் ஒரு கால் உயரத் தூக்கியபடி யே தெரிந்தது வியர்க் க, விறுவிறுக்கக் கண்ணன் ஆடிய அந்த நாட்டியத்துக்கு அபூர்வமான ஒரு பெயரைச் சூட்டினார்க ள் மகான்கள். கண்ணன் ஆடியது பரத நாட்டியமோ, கதகளி யோ, குச்சுப்புடியோ, மணிபுரியோ அல்ல. அண்ட சராசரங்களை ஆட்டிப் படைக்கும் ஸ்வாமி, ஒரு கை வெண்ணெ ய்க்காக ஆடியதை ‘நவநீத நாட்டியம்’ என்கிறார்கள். யசோதை கடைந்து முடித்தாள். ஸ்வாமியு ம் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, கோயிலில் பிரசாதத்தை எதிர்நோக்கும் பக்தனைப் போல, யசோதையின் முகத்தையே பார்த் து கொண்டி ருந்தான். ‘ஒரு யானைத் தலை அளவுக்கு வெண்ணெய் தருவாள் அம்மா!’ என்ற எதிர்பா ர்ப்பு.யசோதையோ ஒரு கடுக்காய் அளவுக்குச் வெண்ணெய் உருண்டையுடன் கண்ணனை நெருங்கினாள். அதற்குள் ஸ்வாமி ஒரு தந்திரம் செய்தார். ‘அதை, குறைந்த பட்சம் இரண்டு கடுக்கா ய் அளவுக்காவது ஆக்கிவிடலாம்!’ என்ற எண்ண த்தில் ஒரு தூணின் பக்கத்தில் போய் நின்றார் அந்தத் தூண் அவ்வப் போது வெண்ணெய்க் கையைத் தடவித் தடவி, கண்ணாடியாய் பளபளத்தது. அதில் தெரிந்த வடிவத்தையும் சேர்த்து, இரண்டு கண்ணன் நிற்பதைப் போல இருந்தது. ‘இரண்டு கண்ணனுக்கு இரண்டு வெண்ணெய் உருண்டை களை கொடுப்பாள் யசோதை..’ என்பது ஸ்வாமியின் எண்ணம். கண்ணனுக்கு இவ்வளவு இருந்தால், அவனை வளர்த்து அவன் லீலைகளை எல்லாம் அனுப விக்கும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு எவ்வ ளவு இருக்கும்? கண் ணனின் லீலையில் தன்னை மறந்தாள் யசோதை. ‘நமக்கு இரண்டு கண்ணன்க ள் போலிருக்கிறது. இந்த இருவரு க்குமே வெண்ணெய் தர வேண்டும்’ என நினைத் தாள். ‘ஆஹா! நமக்குத்தான் வெற்றி!’ என சந்தோஷப்பட்ட கண்ணன் ஆசையாகக் கை நீட்டினார். எதிர்பாராத காரியம் செய்தாள் யசோதை. தன் கையில் வைத்திருந்த கடுக்காய் அளவு வெண்ணெயை இரண்டு பங்காக் கி, அதை இருவருக்கும் கொடுத்தாளாம். 🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்... 🌹29.08.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🪔 கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பரிகாரங்கள் 🌺 #🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #🙏கிருஷ்ணா #🌻🌻காலை வணக்கம்🌻🌻
27 shares

More like this