Babu Babuji
619 views • 23 hours ago
ஓம் நமசிவாய 🙏🏼🔥🙏🏼🙌
அப்படி வாழ்நாளில் இதுவரை செல்லாத திருவண்ணாமலை சென்று அம்மையப்பனை தரிசனம் செய்தோம்.
திருவண்ணாமலை நல்லது கெட்டதை கண்டிப்பாக பதிவு போட வேண்டும்.
நல்ல விஷயங்கள் கோவில் சுத்தமாக இருக்கிறது நடைபாதையில் குடிப்பதற்கு தண்ணீர் வைத்திருக்கிறார்கள்.
கோவிலுக்குள் வாங்கும் தின்பண்டங்கள் தரமானதாக இருந்தது. இதற்கு கண்டிப்பாக பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் கொடுமையும் சொல்ல வேண்டும் அல்லவா?
நேற்று நாங்கள் திருவண்ணாமலை சென்று சேர்ந்தோம்.
அப்போது அங்கே நாம் தங்கிய லாட்ஜ் உரிமையாளரிடம் சாமி தரிசனம் எப்போது செய்யலாம் என்று கேட்டோம்.
அவர் கூறிய பதில் காலை ஐந்தரை மணிக்கு நடை திறக்கும் கூட்டமாக இருக்கும் என்றார். நீங்கள் கூட்டம் இல்லாமல் சாமியை பார்க்க வேண்டும் என்றால் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார்.( என் மகனுக்கு பணம் கொடுத்து கடவுளை தரிசிப்பது பிடிக்காது) ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்களை நேரடியாக கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறினார். இல்லையென்றால் வரிசையில் நின்று தான் சாமி தரிசனம் செய்ய முடியும் என்றார். அதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
நாங்கள் பணம் கொடுக்க மனம் இல்லாமல் வரிசையில் செல்லலாம் என்று நினைத்தோம்.
அதற்காக காலை 4 மணி அளவில் கோவில் வாசலில் சென்று நின்றோம் 4-30 மணி ஆரம்பித்த போது அங்குள்ள கோவில் ஊழியர்களும் ஏஜெண்டுகளும் ஆயிரம் ரூபாயை வாங்கிய நபர்களை உள்ளே அனுப்ப ஆரம்பித்தார்கள் இந்த காசு அவர்களுக்கு அரசாங்கத்துக்கு அல்ல.
மக்கள் கேள்வி கேட்ட போது இவர்கள் எல்லாம் லோக்கல் ஆட்கள் என்றார்கள். உண்மையில் அந்த அநியாயத்தை பார்க்க முடியவில்லை, ஏனென்றால் நான்கரை மணி நேரத்தில் இருந்து ஐந்தரை மணி வரை இவர்கள் குறைந்தது ஆயிரம் பேரை ஒரு வாசலுக்கு உள்ளேயே அனுப்பி இருப்பார்கள், பண வாசல்கள் இருக்கிறது சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் ஆயிரம் ரூபாய்
அதற்கு மேல் வசூல் செய்கிறார்கள் அனைத்து பணங்களும் ஏஜெண்டுகளும் கோவில் ஊழியர்களும் பங்கு போட்டு எடுத்துக் கொள்கிறார்கள்
நான் குடும்பத்துடன் சென்றிருந்தேன் என் மருமகள் கையில் கைக்குழந்தை இருந்தது எங்களை உள்ளே அனுப்ப வேண்டாம் என் மருமகளையும் குழந்தையும் உள்ள அனுப்பி உட்கார வையுங்கள் கூட்ட நெரிசலாக இருக்கிறது என்று கூறினேன் அதற்கு போயா அந்தப் பக்கம் அதெல்லாம் முடியாது ஐந்தரை மணிக்கு தான் நடை திறக்கும் அப்போதுதான் உங்களை உள்ளே அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள்.
நாங்கள் எந்த நாட்டு மனிதர்கள் என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை. இதில் கொடூரம் என்னவென்றால் வரிசையில் வயதானவர்களும் குழந்தைகளும் அதிகம் இருந்தார்கள். மனசாட்சி இல்லாமல் இவர்கள் இப்படி பணத்தை வாங்கி வசதி படைத்தவர்களை உள்ளே அனுப்புவது என்ன நியாயம் என்று நானும் அங்கிருந்த பொதுமக்களும் அந்த கொடுமைக்காரர்களிடம் கேட்டோம் அதற்கு அவர்கள் பதில் கேவலமாக இருந்தது. அதைக் கேட்டு நான் ஊழியரிடம் சொன்னேன் நான் இதை கண்டிப்பாக முகநூலில் ட்விட்டரில் போட போகிறேன் என்னால் முடிந்ததை நான் கண்டிப்பாக செய்வேன் என்றும் கூறினேன்
அதற்கு அவர்கள் நீ எது வேண்டுமானாலும் செய்துகொள் வேண்டுமென்றால் காவல்துறையிடம் புகார் தெரிவித்துக் கொள் அதற்கெல்லாம் பயந்தவர்கள் நாங்கள் கிடையாது என்றார்கள்.
இது முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அறநலத்துறை அமைச்சர் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
இந்த அநியாயம் திருவண்ணாமலை மட்டுமல்ல பிரசித்தி பெற்ற அனைத்து கோவில்களிலும் நடக்கிறது.
இதற்கு அரசாங்கத்தின் பங்கு இருப்பதாக அங்கு இருக்கும் மக்கள் கூறுகிறார்கள்
ஒரு நல்ல அரசாக இருந்தால் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள்.
இதைவிட கொடுமை அங்க போர்டு வைத்திருக்கிறார்கள் கேமரா வைத்திருக்கிறார்கள் எச்சரிக்கை பலகையில் ஏஜெண்டுகளை நம்பக் கூடாது என்றும் வாசகம் இருக்கிறது என்ன பிரயோஜனம்
குழந்தைகள் வயதானவர்களை கூட கனிவுடன் கவனிக்காத இந்தக் கொடூர அரசு ஊழியர்களையும் ஏஜெண்டுகளையும் ஜோசப் விஜய் அரசு என்ன செய்யப் போகிறது.
இந்து இயக்கங்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை? கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு நம் கோவில்களில் தேவை.
அண்ணாமலையார் அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்? கண்டிப்பாக இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவை அவர் வழங்குவார் என்று நினைக்கிறேன்
ஓம் நமச்சிவாய. #🙏🏼ஓம் நமசிவாய #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👍உன்னால் முடியும் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
6 shares