Ayisha💞
893 views 1 days ago
💞சுபஹானல்லாஹ்! திடீர் என்று ஏற்படும் நோய்கள் பேரழிவுகளுக்கு மத்தியில், அல்லாஹ்விடம் நல்வாழ்வை தொடர்ந்து கேட்க வேண்டும். நிச்சயமாக பிரார்த்தனை வானத்திலிருந்து இறங்கும் சோதனைகளைத் தடுக்கக்கூடியது.. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي ​ யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நல்வாழ்வை வேண்டுகிறேன். யா அல்லாஹ்! எனது மார்க்கம், எனது துன்யா (உலக வாழ்வு), எனது குடும்பம் எனது செல்வம் ஆகியவற்றில் உன்னிடம் மன்னிப்பையும் நல்வாழ்வையும் வேண்டுகிறேன். யா அல்லாஹ்! எனது குறைகளை மறைப்பாயாக, எனது அச்சத்தைப் போக்கி அமைதி அளிப்பாயாக. யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், வலது புறமும், இடது புறமும், மேலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக. எனக்குக் கீழிருந்து நான் வஞ்சிக்கப்படுவதிலிருந்து உனது பெருமையைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்." (ஆதாரம்: அபூ தாவூத் (5074), இப்னு மாஜா (3871). اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ ​ யா அல்லாஹ்! சோதனையின் சிரமத்திலிருந்தும், துரதிர்ஷ்டத்தின் பிடியிலிருந்தும், தீய விதியிலிருந்தும், எதிரிகளின் எள்ளிநகையாடலிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (ஆதாரம்: ஸஹீஹ் அல்-புகாரி (6347, 6616), ) (ஸஹீஹ் முஸ்லிம் (2707)) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ ​ யா அல்லாஹ்! உனது அருட்கொடை நீங்குவதிலிருந்தும், உன்னிடமிருந்துள்ள நல்வாழ்வு மாறுவதிலிருந்தும், உனது திடீர் தண்டனையிலிருந்தும், உனது அனைத்து கோபங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (2739)). #🕋யா அல்லாஹ்
30 shares

More like this