ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
515 views • 10 hours ago
தர்மபுரியில் சுறுசுறுப்புடன் அரசு பள்ளி ஒன்றில் படித்து வரும் புகனேஷ்குமார் என்ற 5 வயது சிறுவனுக்கு இருதயத்தில் தீவிர பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது....
மருத்துவர்கள் இது சிறுவனின் உயிருக்கே ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என கூறியதோடு, உடனடியாக ஆபரேஷன் செய்ய ரூ.2.85 லட்சம் செலவு ஆகும் என தெரிவித்துள்ளார். அவனது தந்தை சாதாரண கட்டுமான தொழிலாளி என்பதால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியவில்லை. சிறுவனின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சிறுவன் புகனேஷ்குமாரின் ஒளிமயமான வாழ்க்கையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சிறிய தொகை, பெரிய தொகை என்றெல்லாம் இல்லை. உங்களால் முடிந்த அளவு உதவி செய்தாலே போதும்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் புகனேஷ்குமார். அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த புகனேஷ்குமார் தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் உற்சாகமாக பள்ளி சென்று வந்தான்.
பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டும் துறுதுறுவுடன் சுற்றி வந்த சிறுவன் புகனேஷ்குமாருக்கு சிக்கலான இருத நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பள்ளியில் நடத்தப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனையில்தான் இந்த இருதய பாதிப்பு கண்டறியப்பட்டது. அதுவரை புகனேஷ்குமாருக்கு இப்படி ஒரு நோய் பாதிப்பு இருப்பது அவரது பெற்றோருக்கே தெரியாது....
தர்மபுரி அரசு மருத்துவமனையில் மியாட் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு மருத்துவர்கள் செல்ல அறிவுறுத்தினர். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் சிறுவன் புகனேஷ்குமாருக்கு இருதயத்தில் Large Posterior ASD மற்றும் PAPVD - RPLV to RA ஆகிய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்புக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், காலப்போக்கில் சிறுவனின் இதயத்தின் அளவை அதிகரிக்கச் செய்து, உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி, எதிர்காலத்தில் உயிருக்கே ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினர்.
இதற்கான அறுவை சிகிச்சை செய்ய மொத்தம் ரூ.2,85,000 செலவு ஆகும் என்றும் தெரிவித்தனர். ஆபரேஷன் செலவு, ஐசியூவில் தங்கி எடுக்க கூடிய பராமரிப்பு,மருந்துகள் என அனைத்தும் இதில் அடங்கும். புகனேஷ்குமாரின் தந்தை கோபால் சாதாரண கட்டுமான தொழிலாளி. நாள் ஒன்றுக்கு வெறும் 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுகிறார்...
பாதி நாள் வேலையும் இல்லாத நிலையே இருக்கும் என்பதால், இந்த சம்பளத்தை வைத்து அவரது அன்றாட குடும்ப செலவுகளை சமாளிக்கவே சிறுவன் புகனேஷ்குமாரின் குடும்பம் திணறுகிறது. இப்படியான சூழலில், இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது என்பது புகனேஷ்குமாரின் தந்தை கோபாலால் இயலாத காரியம் ஆகும்.
எனவே, சிறுவன் புகனேஷ்குமாரின் ஒளிமயமான வாழ்க்கையை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சிறிய தொகை, பெரிய தொகை என்றெல்லாம் இல்லை. உங்களால் முடிந்த அளவு உதவி செய்தாலே போதும். நீங்கள் அளிக்கும் சிறிய தொகை கூட சிறுவன் புகனேஷ்குமாரின் உயிரை காப்பாற்ற உதவும். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
14 likes
15 shares