MUTHUPANDIAN RAMKUMAR
851 views • 11 days ago •
#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 .8.2026
*வாமன ஜெயந்தி ஸ்பெஷல்*🌹
*🙏🕉️ஓம் நமோ நாராயணா 🕉️🙏*
*🙏🕉️மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய நான்கு அவதாரங்களுக்கு பிறகு ஸ்ரீமகாவிஷ்ணு முழுமையாக மனித உருவம் கொண்டு எடுத்த முதல் அவதாரம் வாமன அவதாரம்தான்.🕉️🙏*
*🙏 பொதுவாக அவதாரம் என்றால், மனித உருவத்திலோ அல்லது வேறு ஏதாவது வடிவத்திலோ வந்த தீமையை அழித்து, தன்னுடைய பக்தர்களை காத்து, தர்மத்தை நிலைநாட்டுவதாகும். ஆனால், வாமன அவதாரத்தில் பகவான் யாரையும் வதம் செய்யவில்லை. சில குறிப்பிட்ட நீதிகளை இந்த உலகிற்கு எடுத்துரைப்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்டது வாமன அவதாரமாகும்.🕉️🙏*
*🙏🕉️மகாபலி சக்கரவர்த்தி, அசுர குருவான சுக்ராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி தேவலோகத்தை கைப்பற்றுவதற்காக நர்மதை ஆற்றங்கரையில் மிகப்பெரிய யாகத்தை நடத்தினார். இதைக்கண்டு அஞ்சிய தேவேந்திரன் மற்றும் அவனது தாய் அதிதீ ஆகியோர் பகவானை பிரார்த்தனை செய்தனர்.🤲🕉️🙏*
*🙏🕉️தேவேந்திரனுக்கு தம்பியாக அதிதீயிடம் பகவான் அவதரித்தார். தேவேந்திரனுக்கு தம்பி என்பதால் உபேந்திரன் என இவர் அழைக்கப்பட்டார். ✴️ஆவணி மாதம் திருவோணம் நாளில் துவாதசி திதியில்✴️ வாமனர் அவதரித்த திருநாளே கேரளாவில் ஓணம் பண்டிகையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.💐🌷🌹🙏🙏*
7 shares