More like this
- MUTHUPANDIAN RAMKUMAR#🕉️ஓம் முருகா #செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #திங்ககிழமை செவ்வாய் கிழமை புதன் கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ...158
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩1216
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩1611
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩1416
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 .8.2026 *வாமன ஜெயந்தி ஸ்பெஷல்*🌹 *🙏🕉️ஓம் நமோ நாராயணா 🕉️🙏* *🙏🕉️மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய நான்கு அவதாரங்களுக்கு பிறகு ஸ்ரீமகாவிஷ்ணு முழுமையாக மனித உருவம் கொண்டு எடுத்த முதல் அவதாரம் வாமன அவதாரம்தான்.🕉️🙏* *🙏 பொதுவாக அவதாரம் என்றால், மனித உருவத்திலோ அல்லது வேறு ஏதாவது வடிவத்திலோ வந்த தீமையை அழித்து, தன்னுடைய பக்தர்களை காத்து, தர்மத்தை நிலைநாட்டுவதாகும். ஆனால், வாமன அவதாரத்தில் பகவான் யாரையும் வதம் செய்யவில்லை. சில குறிப்பிட்ட நீதிகளை இந்த உலகிற்கு எடுத்துரைப்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்டது வாமன அவதாரமாகும்.🕉️🙏* *🙏🕉️மகாபலி சக்கரவர்த்தி, அசுர குருவான சுக்ராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி தேவலோகத்தை கைப்பற்றுவதற்காக நர்மதை ஆற்றங்கரையில் மிகப்பெரிய யாகத்தை நடத்தினார். இதைக்கண்டு அஞ்சிய தேவேந்திரன் மற்றும் அவனது தாய் அதிதீ ஆகியோர் பகவானை பிரார்த்தனை செய்தனர்.🤲🕉️🙏* *🙏🕉️தேவேந்திரனுக்கு தம்பியாக அதிதீயிடம் பகவான் அவதரித்தார். தேவேந்திரனுக்கு தம்பி என்பதால் உபேந்திரன் என இவர் அழைக்கப்பட்டார். ✴️ஆவணி மாதம் திருவோணம் நாளில் துவாதசி திதியில்✴️ வாமனர் அவதரித்த திருநாளே கேரளாவில் ஓணம் பண்டிகையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.💐🌷🌹🙏🙏*715
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 ஆவணி அவிட்டம் – வேதத்தின் ஆண்டு விழாவாகப் போற்றப்படும் கல்வித்திருநாள் வணக்கம் அன்பு வாசகர்களே! 🙏 தமிழர் ஆன்மிக மரபில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகப் போற்றப்படுவது ஆவணி அவிட்டம். இதனை “கல்வித்திருநாள்” என்று காஞ்சி மகாபெரியவர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். படைப்புக் கடவுளான பிரம்மதேவருக்கு வேதஞானம் அருளப்பட்ட புனித நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுவதால், இதனை “வேதத்தின் ஆண்டு விழா” என்றும் ஆன்மிக மரபில் போற்றுகின்றனர். 📖 உபாகர்மம் என்றால் என்ன? பவுர்ணமியும் அவிட்ட நட்சத்திரமும் இணையும் நாளில், வேத மரபைப் பின்பற்றுவோர் நடத்தும் முக்கியமான அனுஷ்டானம் உபாகர்மம் எனப்படுகிறது. “உபாகர்மம்” என்பது வேத அத்யயனத்தை மீண்டும் தொடங்குவதைக் குறிக்கும் ஒரு புனித அனுஷ்டானமாகும். வேதங்களைப் பயில்வதும், முனிவர்கள் வழியாக நமக்குக் கிடைத்த வேத மரபுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதும் இந்நாளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பல்வேறு வேத மரபுகளில் உபாகர்மம் நடைபெறும் நாள் மற்றும் முறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். எனவே, ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப மரபு மற்றும் ஆசார்யர் வழிகாட்டுதலின்படி அனுஷ்டிப்பது சிறந்தது. 🌊 தீர்த்தக் கரையில் தொடங்கிய புனித மரபு முன்னொரு காலத்தில், உபாகர்ம தினத்தன்று பக்தர்கள் புனிதமான தீர்த்தக் கரைகளில் நீராடி, உடல் மற்றும் மனத் தூய்மையுடன் வேத அனுஷ்டானங்களை மேற்கொண்டனர். அதன்பின் மரபுப்படி புதிய பூணூல் அணிந்து, வேத அத்யயனத்தைத் தொடங்குவது வழக்கமாக இருந்தது. பூணூல் மாற்றுவது மட்டும் இந்த நாளின் முழுப் பொருள் அல்ல. அதனுடன் இணைந்திருப்பது அறிவைப் புதுப்பித்துக் கொள்ளும் உறுதி, வேத மரபை நினைவுகூருதல், ஒழுக்கத்துடன் கல்வியைத் தொடருதல் போன்ற உயர்ந்த கருத்துகளாகும். இன்று பலர் வசதி மற்றும் மரபுக்கு ஏற்ப கோயில்களிலும், வீடுகளிலும், வேத அறிஞர்களின் வழிகாட்டுதலுடனும் இந்த அனுஷ்டானத்தை மேற்கொள்கின்றனர். 🙏 ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் நாள் நாம் இன்று வேதங்கள், மந்திரங்கள், ஆன்மிக அறிவு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் காரணமாக இருந்த வேத கால ரிஷிகளுக்கு நன்றியுணர்வு செலுத்துவதும் இந்த நாளின் முக்கிய அம்சமாகும். இதன் ஒரு பகுதியாக, மரபுப்படி ரிஷி தர்ப்பணம் செய்யப்படுகிறது. இது வெறும் சடங்காக மட்டுமல்லாமல், “அறிவை உருவாக்கியவர்களை மறக்கக்கூடாது; அறிவை நமக்குக் கடத்தி வந்த குருமார்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்” என்ற உயர்ந்த வாழ்க்கைப் பாடத்தையும் உணர்த்துகிறது. ✨ ஆவணி அவிட்டம் சொல்லும் வாழ்க்கைப் பாடம் கல்விக்கு வயது இல்லை. கற்றலுக்கு முடிவும் இல்லை. ஆவணி அவிட்டம் நமக்குச் சொல்லும் அழகான செய்தி: 📚 ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்போம் 🙏 நமக்கு அறிவளித்த குருமார்களை நினைவுகூர்வோம் 🕉️ அறிவை நல்வழியில் பயன்படுத்துவோம் ✨ மரபையும் ஆன்மிக ஞானத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் வேதங்களை ஓதுபவர்களுக்கு மட்டுமல்லாமல், கல்வியின் மதிப்பையும், குருவின் பெருமையையும், அறிவுக்கான நன்றியுணர்வையும் நினைவூட்டும் நாளாக ஆவணி அவிட்டத்தின் கருத்தை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். 🌟 இன்றைய தலைமுறைக்கு ஒரு சிந்தனை புத்தகங்களில் அறிவைத் தேடுகிறோம். இணையத்தில் தகவல்களைத் தேடுகிறோம். ஆனால் அறிவை நல்ல வழியில் பயன்படுத்தும் விவேகம் நம்மிடம் இருக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும். தகவல் அதிகரிப்பது மட்டும் கல்வி அல்ல. பணிவு, ஒழுக்கம், நன்றியுணர்வு, நல்லதைத் தேர்ந்தெடுக்கும் அறிவு ஆகியவையும் உண்மையான கல்வியின் அடையாளங்களே. அந்த வகையில், ஆவணி அவிட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய உறுதியைத் தரட்டும்: “தினமும் புதிதாகக் கற்பேன்; கற்றதை நல்ல வழியில் பயன்படுத்துவேன்; எனக்கு அறிவளித்தவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்.” 🕉️ வேத ஞானத்தின் ஒளி நம் மனங்களில் என்றும் பிரகாசிக்கட்டும்! 🙏1413
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 ஜெபம்*🌹 .28.8.2026 "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என பகவான் கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்ட வார்த்தையிலேயே காயத்ரி மந்திரம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை, சூரிய உதயத்திற்கு முன், சூரியன் உச்சிக்கு வரும் நேரம், சூரிய அஸ்தமனத்திற்கு முன் என ஒரு நாளைக்கு மூன்று வேளை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். காயத்ரி மந்திரத்தின் மகிமையும், அதன் பலன்களும் "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என பகவான் கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்ட வார்த்தையிலேயே காயத்ரி மந்திரம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை, சூரிய உதயத்திற்கு முன், சூரியன் உச்சிக்கு வரும் நேரம், சூரிய அஸ்தமனத்திற்கு முன் என ஒரு நாளைக்கு மூன்று வேளை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். காயத்ரி மந்திரத்தை பொருள் அறிந்து, மிகவும் நிதானமாக, சுத்தமான இடத்தில் அமர்ந்து சொல்ல வேண்டும். காயத்ரி மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு அதை உச்சரிக்க துவங்கிய நிமிடத்தில் இருந்து நற்பண்புகள் அதிகரிக்க துவங்கும். வாக்கு பலிதம், புகழ், செல்வம், நன்மைகள் ஆகியவை ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். இந்துக்களின் மிக புனிதமான நாள் காயத்ரி ஜபம் நாளாகும். பொதுவாக காயத்ரி ஜபம் திருநாள் ஸ்ரவண மாதத்தில் பெளர்ணமிக்கு அடுத்த நாள் தான் வரும். இந்த ஆண்டு பெளர்ணமி திதியுடனேயே இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். தென்னிந்தியாவில் மிக முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படும் காயத்ரி ஜபம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி இன்று வருகிறது. காயத்ரி ஜப பாராயணத்தை காயத்ரி ஜப சங்கல்பம் என்றும் சொல்வதுண்டு. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்ளும் பிராமணர்கள் மறுநாள் காயத்ரி ஜபம் அன்று கூட்டாக சேர்ந்து காயத்ரி ஜபம் செய்வார்கள். 108 அல்லத 1008 என்ற எண்ணிக்கையில் காயத்ரி ஜபம் பாராயணம் செய்யப்படும். ஆவணி அவிட்டம், உபகர்மாவை தொடர்ந்து காயத்ரி ஜபம் செய்தது மிக முக்கியமான சடங்காகும். காயத்ரி மந்திரம் என்பது சூரிய பகவானுக்கும், காயத்ரி மாதாவிற்கும் உரிய மந்திரமாகும். காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்கு அனைத்து பாவங்கள், துன்பங்கள், தடைகள் ஆகியவற்றில் இருந்த விடுபடுவார்கள். மந்திரங்களில் தலையாய மந்திரமாகவும், மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகவும் கருதப்படுவது காயத்ரி மந்திரம். காயத்ரி ஜபத்தன்ற கோவிலுக்க சென்ற வழிபடுவது, புனித நீராடுவது, காயத்ரி மந்திரம் ஜபிப்பது ஆகியன அளவில்லாத புண்ணிய பலன்களை பெற்றுத் தரும். காயத்ரி தேவியை வேத மாதா என்றும், இவரே வேதங்கள் அனைத்தையும் தோற்றுவித்தவர் என்றும் புராணங்கள் போற்றுகின்றன. பசு மாட்டில் இருந்து தோன்றியவர் காயத்ரி மாதம் பிரம்மாவின் துணைவி ஆவார். * காலையில் காயத்ரியாகவும், பகலில் சாவித்ரியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் இந்த மந்திரம் ஜபிக்கப்படுகிறது. * காயத்ரி மந்திரம் ஜபித்த பிறகே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் முதல் இடம் காயத்ரி மந்திரத்திற்கு தான். * காயத்ரி மந்திர விளக்கம் - வேத மாதாவே எங்கள் மனங்கள் இருளால் நிரம்பி உள்ளது. அந்த இருளை எங்களிடம் இருந்து அகற்றுங்கள். எங்களுக்குள் இருந்து ஞான ஒளியை சுடர் விட செய்ய வேண்டும். காயத்ரி தியானம் "ஓம் புர் புவஹ் ஸ்வாஹ் தத் சவிதுர் வரேண்யம்; பார்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ் பிரச்சோதயாத்." சத்த-அர்த்தம் ஓம் - பர பிரம்மன்; புர் - பூலோக (உடல் விமானம்); புவஹ் - அந்தரிக்ஷா ஸ்வாஹ்; ஸ்வர்க லோக தத் - பரமாத்மா சவிதுர்; ஈஸ்வரா (சூர்யா); வரேண்யம்; வணங்குவதற்கு ஏற்றது; பார்கோ - பாவங்களையும் அறியாமையையும் நீக்குபவர்; தேவஸ்ய - மகிமை (ஞான ஸ்வரூப); தீமஹி - தியானம் செய்கிறோம்; தியோ - புத்தி (புத்தி); யோ - எது; ந - எங்கள்; பிரச்சோதயாத் - அறிவூட்டு. பிரபஞ்சத்தைப் படைத்தவரும், வழிபாட்டிற்குத் தகுதியானவரும், அனைத்து பாவங்களையும் அறியாமையையும் நீக்குபவருமான ஈஸ்வரனையும் அவரது மகிமையையும் தியானிப்போம். அவர் நம் அறிவை ஒளிரச் செய்யட்டும்." "ஓ அன்பான தாயே! இந்த நேரத்தில் நான் அவித்யா அல்லது அறியாமையின் காரணமாக, என் தூய்மையற்ற புத்தியின் மூலம் என் உடலை சுயமாக எடுத்துக் கொண்டேன். என் உண்மையான இயல்பை அறிய உதவும் ஒரு தூய புத்தியை எனக்குக் கொடுங்கள். எனக்கு ஒளியையும் அறிவையும் கொடுங்கள்" என்று சாதகன் அன்னை காயத்ரியிடம் பிரார்த்தனை செய்கிறான்.2915
- MUTHUPANDIAN RAMKUMAR#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 ஜெயந்தி ஸ்பெஷல்* 27.8.2026🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿 Sri Lakshmi Hayagreeva Perumal, Tapovanam, Anantapuram, Andhra Pradesh dhivya sevai. << ஹயக்ரீவர் மூல மந்திரம் >> உக்தீக ப்ரண வோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர ஸர்வ வேத மயோச்ந்த்ய ஸர்வம் போதய! போதய ... !!! ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் : ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே: வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:!!2527
- MUTHUPANDIAN RAMKUMAR[25/08, 5:27 pm] +91 73388 81458: *கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்*🌹 கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? 👉 தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். 👉 எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. 👉 கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். 👉 குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்... [25/08, 5:27 pm] +91 73388 81458: *#கோவர்த்தனகிரிதாரியை….* *பல்லவி* கோவர்தனகிரிதாரியை தேவகிமைந்தனை ஆவினங்கள் மேய்க்கும் கேசவனைத் துதித்ததேன் அனுபல்லவி மூவடி மண் கேட்டு மாவலியை வென்றவனை தேவரும் மூவரும் பணிந்திடும் நாராயணனை சரணம் ஆவலுடன் காளிங்கன் தலைமீது நடமாடிய ஶ்ரீவாசுதேவனை அசோதை மைந்தனை தேவி ஜானகி நேசிக்கும் ஶ்ரீராமனை பூவுலகோர் கொண்டாடும் பரந்தாமனை காவளம்பாடி கோபாலகிருஷ்ணனை மூவாசை பிணி போக்கும் நந்தகுமாரனை தேவாதி தேவனை கண்ணனை மாதவனை சேவடி பணிந்தேன் எனக்கருள வேண்டுமென [25/08, 5:27 pm] +91 73388 81458: *கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்*🌹 ஸ்ரீ கிருஷ்ண 108 அஷ்டோத்ரம் 1. க்ருஷ்ணாய – கருமை நிறம் உள்ளவரே 2. கமலநாதாய – ஸ்ரீலட்சுமி நாதரே 3. வாஸுதேவாய வஸுதேவ புத்திரரே 4. ஸநாதநாய – பிரம்மா உள்ளிட்ட தேவருக்கும் மிகப் பழைமையாகத் திகழ்பவரே 5. வஸுதேவாத்மஜாய – வசுதேவரின் பிரார்த்தனையால் புத்திரராகப் பிறந்தவரே 6. புண்யாய -புண்ணியத்தைச் செய்பவரே. 7. லீலாமானுஷ விக்ரஹாய – விளையாட்டாக மானிட சரீரத்தை எடுப்பவரே 8. ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய – ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, கௌஸ்துபம் என்னும் மணி ஆகியவற்றைத் தரித்திருப்பவரே 9. யசோதாவத்ஸலாய- யசோதையிடம் மிக்க வாத்சல்யம் கொண்டவரே. 🌿 10. ஹரயே – அண்டியவரின் பாவங்களை அப்படியே அறுத்து எறிபவரே🌿 11. சதுர்புஜாத்த சக்ராஹிகதா சங்காத்யுத ஆயுதாய – நான்கு கைகளிலும் சக்கரம், கத்தி, தண்டு, சங்கம் என்னும் ஆயுதங்களை தரித்திருப்பவரே🌿 12. தேவகீநந்தனாய – தேவகியின் புத்திரரே🌿 13. ஸ்ரீஸாய – திருமகள் நாயகரே🌿 14. நந்தகோப ப்ரியாத்மஜாய – நந்தகோபருக்கு மிகவும் பிரியமான பிள்ளையே🌿 15. யமுனா வேக ஸம்ஹாரிணே – யமுனையின் வேகத்தைத் தடுத்தவரே🌿 16. பலபத்ர ப்ரிய அநுஜாய – பலராமருக்கு மிகவும் பிரியமான தம்பியானவரே🌿 17. பூதனாஜீவித ஹராய – கொல்லவந்த கொடிய பூதனையின் உயிரைப் போக்கியவரே🌿 18. சகடாசுர பஞ்சனாய – சகடனாக வந்த அசுரனை முறித்து எறிந்தவரே🌿 19. நந்த வ்ரஜஜநா நந்திதே – வ்ரஜபூமியான திருஆய்ப்பாடி மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவரே🌿 20. சச்சிதானந்த விக்ரஹாய – சச்சிதானந்த மயமான சரீரம் உடையவரே🌿 21. நவநீத விலிப்தாங்காய – புத்தம்புது வெண்ணெயை முழுவதும் பூசிக்கொண்ட உடம்பினைக் கொண்டவரே🌿 22. நவநீத நடாய – வெண்ணெய்க்காக நாட்டியம் ஆடுபவரே🌿 23. அநகாய – தோஷம் சிறிதும் இல்லாதவரே🌿 24. நவநீத நவாஹாராய – புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய்யையே அமுது செய்பவரே🌿 25. முசுகுந்த ப்ரஸாதகாய – முசுகுந்தருக்கு அனுக்கிரஹம் செய்தவரே🌿 26. ஷோடசஸ்த்ரீ ஸஹஸ்ரேசாய – பதினாயிரம் பெண்களுக்குத் தலைவரானவரே🌿 27. த்ரிபங்கீ லலிதா க்ருதயே – வயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளால் அழகான உருவம் கொண்டவரே🌿 28. சுகவாக் அம்ருதாப்த்த இந்தவே – சுகாசாரியாரின் அமுத வாக்காகிய பாற்கடலுக்கு சந்திரன் போன்றவரே🌿 29. கோவிந்தாய – பசுக்களுக்கு இந்திரன் என உலகத்தால் துதிக்கப்படுபவரே🌿 30. யோகிநாம்பதயே – யோகிகளுக்கு தலைவரானவரே🌿 31. வத்ஸ வாடசராய – கன்றுகளின் கூட்டங்களில் சஞ்சாரம் செய்பவரே🌿 32. அநந்தாய – எவராலும் அறிய முடியாதவரே 33. தேநுகாசுர மர்த்தனாய – தேனுகன் என்ற அசுரனைக் கொன்றவரே🌿 34. த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய – திருணாவர்த்தன் எனும் அசுரனை புல்லுக்கு இணையாக்கியவரே🌿 35. யமளார்ஜுன பஞ்சனாய – யாமளார்ஜுனர்கள் மருத மரங்களாக நிற்க, அவற்றை முறித்தவரே🌿 36. உத்தாலதால பேத்ரே – உயர்ந்த பனை மரங்களை முறித்தவரே🌿 37. தமால ச்யாமளாக்ருதயே – பச்சிலை மரத்தைப் போன்ற (சியாமள) நீல நிறம் உள்ளவரே🌿 38. கோபகோபி ஈஸ்வராய – கோபர்கள் கோபிகள் இவர்களுக்கு தலைவரானவரே🌿 39. யோகிநே – தத்துவ ஞானத்தால் (யோகத்தால்) அடையப்படுபவரே🌿 40. கோடிசூர்ய சமப்ரபாய – கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி பொருந்தியவரே🌿 41. இளாபதயே – பூதேவியாக இளையின் பதியே🌿 42. பரஸ்மை ஜ்யோதிஷே – பரஞ்சோதி ஸ்வரூபமானவரே🌿 43. யாதவேந்த்ராய – யாதவர்களின் தலைவரே🌿 44. யதூத்வஹாய – யாதவர்களின் பாரத்தை வகிப்பவரே🌿 45. வநமாலினே – வைஜயந்தி எனும் வனமாலையினை அணிந்திருப்பவரே🌿 46. பீதவாஸஸே – பீதாம்பரதாரியே🌿 47. பாரிஜாத அபஹாரகாய – பாரிஜாத விருட்சத்தை அபகரித்தவரே🌿 48. கோவர்த்த நாச லோத்தர்த்ரே – கோவர்த்தன மலையை அநாயாசமாக எடுத்தவரே🌿 49. கோபாலாய – பசுக்களைக் காப்பவரே🌿 50. ஸர்வபாலகாய – எல்லோரையும் காத்து ரட்சிக்கும் ரட்சகரே🌿 51. அஜாய – ஜனனம் எனும் பிறப்பு இல்லாதவரே🌿 52. நிரஞ்ஜனாய – தோஷம் சிறிதும் அற்றவரே🌿 53. காமஜனகாய – மன்மதனுக்கு தந்தையானவரே🌿 54. கஞ்ஜலோசனாய – தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரே🌿 55. மதுக்னே – மது என்னும் அசுரனைக் கொன்றவரே🌿 56. மதுரா நாதாய – மதுரையம்பதிக்குத் தலைவரே🌿 57. த்வாரகா நாயகாய – துவாரகாபுரியின் தலைவரானவரே🌿 58. பலிநே – மிகுந்த பலம் பொருந்தியவரே🌿 59. ப்ருந்தாவனாந்த சஞ்சாரிணே – பிருந்தாவனப் பிரதேசத்தில் சஞ்சரிப்பவரே🌿 60. துளஸீ தாமபூஷணாய – துளசி மாலையை ஆபரணமாகப் பூண்டவரே🌿 61. ஸ்யமந்தக மணேர் ஹர்த்ரே – சியமந்தக மணியைக் கொண்டவரே🌿 62. நரநாராயணாத்மகாய – நரநாராயண ஸ்வரூபமாக உள்ளவரே🌿 63. குப்ஜாக்ருஷ்டாம்பரதராய – திரிவக்கிரை எனும் கூனியினால் இழுக்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்தவரே🌿 64. மாயினே – மாயையினை உடையவரே🌿 65. பரமபூருஷாய – புருஷ உத்தமரே🌿 66. முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விசாரதாய – முஷ்டிகாசுரன், சாணூரன் இவர்களுடன் மல்யுத்தம் செய்வதில் சமர்த்தரே🌿67. ஸம்சார வைரிணே – சம்சார பந்தம் அற்றுப் போகச் செய்பவரே🌿 68. கம்ஸாரயே – கம்சனுகுப் பகையானவரே🌿 69. முராரயே – முரன் எனும் அசுரனுக்கு எதிரியானவரே🌿 70. நரக அந்தகாய – நரகன் எனும் அசுரனை முடித்தவரே🌿 71. அநாதி ப்ரஹ்மசாரிணே – தொன்றுதொட்டு பிரம்மசாரியாக இருப்பவரே🌿 72. க்ருஷ்ணா வ்யஸநகர்ஸகாய – கிருஷ்ணா என்று அழைத்த திரௌபதியின் துக்கத்தைத் துடைத்தவரே🌿 73. சிசுபால சிரச்சேத்ரே – சிசுபாலன் சிரத்தைத் துண்டித்தவரே🌿 74. துர்யோதன குலாந்தகாய – துரியோதனன் குலத்தை அழித்தவரே🌿 75. விதுர அக்ரூர வரதாய – விதுரர், அக்ரூரர் இவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தவரே🌿 76. விஷ்வரூப ப்ரதர்சகாய – அர்ஜுனன் முதலானவர்களுக்கு விசுவரூபக் காட்சியை அளித்தவரே🌿 77. ஸத்யவாசே – சத்தியமான வாக்கினை உடையவரே🌿 78. ஸத்ய சங்கல்பாய – சொன்ன சொல் தவறாதவரே🌿 79. ஸத்யபாமாரதாய – சத்யபாமையிடத்தில் விசேஷ அன்பு பூண்டவரே🌿 80. ஜயிதே – எப்போதும் வெற்றியைக் கொண்டவரே🌿 81. ஸுபத்ரா பூர்வஜாய – சுபத்திரைக்கு முன் பிறந்தவரே (அண்ணன் ஆனவரே)🌿 82. ஜிஷ்ணவே – ஜயசீலரே🌿 83. பீஷ்ம முக்தி ப்ரதாயகாய – பீஷ்மருக்கு மோட்சத்தை அளித்தவரே🌿 84. ஜகத்குரவே – அகில உலகங்களுக்கும் குருவானவரே🌿 85. ஜகந்நாதாய – அகில உலகங்களுக்கும் தலைவர் ஆனவரே🌿 86. வேணுநாத விசாரதாய – புல்லாங்குழல் ஊதுவதில் சமர்த்தரானவரே🌿 87. வ்ருஷபாசுர வித்வம்ஸினே – விசுஷபாசுரனைக் கொன்றவரே🌿 88. பாணாசுர பலாந்தகாய – பாணாசுரனின் சேனையை ஒன்றுமில்லாமல் முடித்தவரே🌿 89. யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே – தருமபுத்திரரை நிலைக்கச் செய்தவரே🌿 90. பர்ஹிபர்ஹாவதம்ஸகாய – மயில் தோகையினை ஆபரணமாக அணிந்தவரே🌿 91. பார்த்தசாரதயே – அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தவரே🌿 92. அவ்யக்தாய – இப்படிப்பட்டவர் என்று எவராலும் அறியமுடியாதவரே🌿 93. கீதாம்ருத மஹோததயே – கீதை எனும் அமுதக் கடலானவரே🌿 94. காளீய பணிமாணிக்யரஞ்சித ஸ்ரீபதாம்புஜாய – காளியன் எனும் பாம்பின் படத்தில் உள்ள மாணிக்கத்தால் சிவந்த பாதக் கமலத்தை உடையவரே🌿 95. தாமோதராய – யசோதை உரலோடு கட்டிய கயிற்றினை வயிற்றில் கொண்டவரே🌿 96. யஜ்ஞபோக்த்ரே – யாகத்தின் பலனைப் பெற்றுக்கொள்பவரே🌿 97. தாநவேந்த்ர விநாசகாய – அசுரர் தலைவனை நாசம் செய்தவரே🌿 98. நாராயணாய – ஆன்மாக்களை தமக்கு இருப்பிடமாகக் கொண்டவரே🌿 99. பரப்ரஹ்மணே – பரப்ரம்ஹ ஸ்வரூபியானவரே🌿 100. பந்நகாசந வாஹநாய – பாம்புகளை உண்ணும் கருடனை வாகனமாகக் கொண்டவரே🌿 101. ஜலக்ரீடா ஸமாசக்த கோபீ வஸ்த்ர அபஹாரகாய – நீரில் விளையாடிய கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தவரே🌿 102. புண்யஸ்லோகாய – புண்ணியமே கீர்த்தியாக உடையவரே🌿 103. தீர்த்தபாதாய – பரிசுத்தமான பாதங்களைக் கொண்டவரே🌿 104. வேதவேத்யாய – வேதங்களால் அறியப்படுபவரே🌿 105. தயாநிதயே – தயைக்கு இருப்பிடமானவரே🌿 106. ஸர்வ பூதாத்மகாய – எல்லாப் பிராணிகளின் ஸ்வரூபமும் ஆனவரே🌿 107. ஸர்வ க்ரஹ ரூபிணே – சூரியன் முதலிய எல்லா கிரகங்களின் உருவமும் உடையவரே🌿 108. பராத்பராய – உயர்ந்தவர்கள் யாவருக்கும் உயர்ந்தவரே கிருஷ்ணருக்கு என்றும் மங்களம் #செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩178
- MUTHUPANDIAN RAMKUMAR#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #🙏🪔 ஓம் செவ்வாய் பகவான் போற்றி 🪔🙏2311