MUTHUPANDIAN RAMKUMAR
822 views 11 days ago AI indicator
#செவ்வாய்க்கிழமை🙏பக்தி ஸ்பெஷல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 ஜெபம்*🌹 .28.8.2026 "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என பகவான் கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்ட வார்த்தையிலேயே காயத்ரி மந்திரம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை, சூரிய உதயத்திற்கு முன், சூரியன் உச்சிக்கு வரும் நேரம், சூரிய அஸ்தமனத்திற்கு முன் என ஒரு நாளைக்கு மூன்று வேளை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். காயத்ரி மந்திரத்தின் மகிமையும், அதன் பலன்களும் "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என பகவான் கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்ட வார்த்தையிலேயே காயத்ரி மந்திரம் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை, சூரிய உதயத்திற்கு முன், சூரியன் உச்சிக்கு வரும் நேரம், சூரிய அஸ்தமனத்திற்கு முன் என ஒரு நாளைக்கு மூன்று வேளை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். காயத்ரி மந்திரத்தை பொருள் அறிந்து, மிகவும் நிதானமாக, சுத்தமான இடத்தில் அமர்ந்து சொல்ல வேண்டும். காயத்ரி மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு அதை உச்சரிக்க துவங்கிய நிமிடத்தில் இருந்து நற்பண்புகள் அதிகரிக்க துவங்கும். வாக்கு பலிதம், புகழ், செல்வம், நன்மைகள் ஆகியவை ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். இந்துக்களின் மிக புனிதமான நாள் காயத்ரி ஜபம் நாளாகும். பொதுவாக காயத்ரி ஜபம் திருநாள் ஸ்ரவண மாதத்தில் பெளர்ணமிக்கு அடுத்த நாள் தான் வரும். இந்த ஆண்டு பெளர்ணமி திதியுடனேயே இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். தென்னிந்தியாவில் மிக முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படும் காயத்ரி ஜபம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி இன்று வருகிறது. காயத்ரி ஜப பாராயணத்தை காயத்ரி ஜப சங்கல்பம் என்றும் சொல்வதுண்டு. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்ளும் பிராமணர்கள் மறுநாள் காயத்ரி ஜபம் அன்று கூட்டாக சேர்ந்து காயத்ரி ஜபம் செய்வார்கள். 108 அல்லத 1008 என்ற எண்ணிக்கையில் காயத்ரி ஜபம் பாராயணம் செய்யப்படும். ஆவணி அவிட்டம், உபகர்மாவை தொடர்ந்து காயத்ரி ஜபம் செய்தது மிக முக்கியமான சடங்காகும். காயத்ரி மந்திரம் என்பது சூரிய பகவானுக்கும், காயத்ரி மாதாவிற்கும் உரிய மந்திரமாகும். காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்கு அனைத்து பாவங்கள், துன்பங்கள், தடைகள் ஆகியவற்றில் இருந்த விடுபடுவார்கள். மந்திரங்களில் தலையாய மந்திரமாகவும், மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகவும் கருதப்படுவது காயத்ரி மந்திரம். காயத்ரி ஜபத்தன்ற கோவிலுக்க சென்ற வழிபடுவது, புனித நீராடுவது, காயத்ரி மந்திரம் ஜபிப்பது ஆகியன அளவில்லாத புண்ணிய பலன்களை பெற்றுத் தரும். காயத்ரி தேவியை வேத மாதா என்றும், இவரே வேதங்கள் அனைத்தையும் தோற்றுவித்தவர் என்றும் புராணங்கள் போற்றுகின்றன. பசு மாட்டில் இருந்து தோன்றியவர் காயத்ரி மாதம் பிரம்மாவின் துணைவி ஆவார். * காலையில் காயத்ரியாகவும், பகலில் சாவித்ரியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் இந்த மந்திரம் ஜபிக்கப்படுகிறது. * காயத்ரி மந்திரம் ஜபித்த பிறகே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் முதல் இடம் காயத்ரி மந்திரத்திற்கு தான். * காயத்ரி மந்திர விளக்கம் - வேத மாதாவே எங்கள் மனங்கள் இருளால் நிரம்பி உள்ளது. அந்த இருளை எங்களிடம் இருந்து அகற்றுங்கள். எங்களுக்குள் இருந்து ஞான ஒளியை சுடர் விட செய்ய வேண்டும். காயத்ரி தியானம் "ஓம் புர் புவஹ் ஸ்வாஹ் தத் சவிதுர் வரேண்யம்; பார்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ் பிரச்சோதயாத்." சத்த-அர்த்தம் ஓம் - பர பிரம்மன்; புர் - பூலோக (உடல் விமானம்); புவஹ் - அந்தரிக்ஷா ஸ்வாஹ்; ஸ்வர்க லோக தத் - பரமாத்மா சவிதுர்; ஈஸ்வரா (சூர்யா); வரேண்யம்; வணங்குவதற்கு ஏற்றது; பார்கோ - பாவங்களையும் அறியாமையையும் நீக்குபவர்; தேவஸ்ய - மகிமை (ஞான ஸ்வரூப); தீமஹி - தியானம் செய்கிறோம்; தியோ - புத்தி (புத்தி); யோ - எது; ந - எங்கள்; பிரச்சோதயாத் - அறிவூட்டு. பிரபஞ்சத்தைப் படைத்தவரும், வழிபாட்டிற்குத் தகுதியானவரும், அனைத்து பாவங்களையும் அறியாமையையும் நீக்குபவருமான ஈஸ்வரனையும் அவரது மகிமையையும் தியானிப்போம். அவர் நம் அறிவை ஒளிரச் செய்யட்டும்." "ஓ அன்பான தாயே! இந்த நேரத்தில் நான் அவித்யா அல்லது அறியாமையின் காரணமாக, என் தூய்மையற்ற புத்தியின் மூலம் என் உடலை சுயமாக எடுத்துக் கொண்டேன். என் உண்மையான இயல்பை அறிய உதவும் ஒரு தூய புத்தியை எனக்குக் கொடுங்கள். எனக்கு ஒளியையும் அறிவையும் கொடுங்கள்" என்று சாதகன் அன்னை காயத்ரியிடம் பிரார்த்தனை செய்கிறான்.
29 shares

More like this