👣🌿🧿 PRIYADARSHI 🧿🌿👣
676 views • 4 days ago
அவ்வளவு சுலபத்தில்
உடைத்துச் சொல்லிவிடவா முடியும்
அந்தப் பெயரை?
அது எழுத்தாலான பெயரல்ல,
உன்னை முதன்முதலில் பார்த்த கணத்தில்
என் இதயத்துடிப்பு ஒழுங்கு தவறியதே...
அந்த லயத்தின் பெயர்.
நீ கடந்து போகையில்
காற்றில் மிதந்து வந்து என்னை வளைத்துக்கொண்ட
மல்லிகையின் வாசம் அது...
என் மொத்தப் பகலையும்
கனவாக மாற்றிவிட்ட
உன் கண் சிமிட்டலின் சப்தம் அது...
அதை எப்படி
ஒற்றைச் சொல்லில் உச்சரிப்பது?
அது சமுத்திரத்தின் அமைதி
அது முதல் மழையின் நனைவு
அது என் பிரபஞ்சத்திற்கே
நான் சூட்டிய ஒற்றை வெளிச்சம்.
அந்தப் பெயரை
என் நான்
உச்சரித்து நீ கேட்டுவிட்டால்,
பிறகு நிலவுக்கு யார் முகம் கொடுப்பது?
பூக்களுக்கு யார் நிறம் தருவது?
நீ அறியாமல் இருக்கும் வரைதான்
நீ வெறும் மனிதப் பெயர்' கொண்ட அழகி.
தெரிந்துவிட்டால்...
நீயே தான் என் அத்தனை
கவிதைகளின் தேவதை..
அடியே...
நீ புகழ்பெற்ற கவிஞனைப் பார்த்திருக்கலாம்.
நான் உன் புன்னைகையின்
முன்னால் ரசித்து எழுதும் கவிஞன்...
#💗నా మనస్సు లోని మాట #💝 నీకై ప్రేమతో...
8 shares