அவ்வளவு சுலபத்தில் உடைத்துச் சொல்லிவிடவா முடியும் அந்தப் பெயரை? ​அது எழுத்தாலான பெயரல்ல, உன்னை முதன்முதலில் பார்த்த கணத்தில் என் இதயத்துடிப்பு ஒழுங்கு தவறியதே... அந்த லயத்தின் பெயர். ​நீ கடந்து போகையில் காற்றில் மிதந்து வந்து என்னை வளைத்துக்கொண்ட மல்லிகையின் வாசம் அது... என் மொத்தப் பகலையும் கனவாக மாற்றிவிட்ட உன் கண் சிமிட்டலின் சப்தம் அது... ​அதை எப்படி ஒற்றைச் சொல்லில் உச்சரிப்பது? ​அது சமுத்திரத்தின் அமைதி அது முதல் மழையின் நனைவு அது என் பிரபஞ்சத்திற்கே நான் சூட்டிய ஒற்றை வெளிச்சம். ​அந்தப் பெயரை என் நான் உச்சரித்து நீ கேட்டுவிட்டால், பிறகு நிலவுக்கு யார் முகம் கொடுப்பது? பூக்களுக்கு யார் நிறம் தருவது? ​நீ அறியாமல் இருக்கும் வரைதான் நீ வெறும் மனிதப் பெயர்' கொண்ட அழகி. ​தெரிந்துவிட்டால்... நீயே தான் என் அத்தனை கவிதைகளின் தேவதை.. அடியே... நீ புகழ்பெற்ற கவிஞனைப் பார்த்திருக்கலாம். நான் உன் புன்னைகையின் முன்னால் ரசித்து எழுதும் கவிஞன்... #💗నా మనస్సు లోని మాట #💝 నీకై ప్రేమతో...
8 shares

More like this