ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
917 views • 10 days ago
கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே வாலிபருடன் மனைவி தகாத உறவு வைத்திருந்ததால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்....
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த வேட்டங்குடியை சேர்ந்த தச்சு தொழிலாளி வெங்கடேசன்(44). இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த துர்காதேவி(41) என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக வெங்கடேசன், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வேட்டங்குடிக்கு வெங்கடேசன் வந்தார். இந்நிலையில் அருகே வசிக்கும் விஜயன் மகன் பாலகுருவுக்கும்(40), துர்காதேவிக்கும் தகாத உறவு இருப்பது வெங்கடேஷனுக்கு தெரியவந்தது....
15 நாட்களுக்கு முன் மனைவி துர்காதேவியை வெங்கடேசன் திட்டினார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டுக்கு துர்காதேவி சென்று விட்டார். இருப்பினும் மயிலாடுதுறைக்கு சென்று துர்காதேவியிடம் பாலகுரு தொடர்ந்து பேசி வந்ததுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேசன் தற்கொலை செய்வதற்கு முன் தனது செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் தனது சாவுக்கு பாலகுரு தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார்.....
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசில் வெங்கடேசன் தாய் அலமேலு(60) புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக பாலகுருவை கைது செய்ததுடன் துர்காதேவியை தேடி வருகின்றனர். மனைவியின் தகாத உறவால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
11 shares