S.ANTHONY✝️YESUMARY
5K views 10 hours ago
*🙏🏻அதிகாலை நவஜெபங்கள்🙏🏻* ✝️🌤️🌾🌴🏡🌤️🌾🌴🏡🛐 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடத்திலே நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், எங்கள் சர்வேசுரா, பிதாவுடையவுஞ் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே. ஆமென். தானாய் அனாதியுமாய், சரீரமில்லாதவருமாய், அளவில்லாத சகல நன்மைச் சுரூபியுமாய், ஞானத்தினாலேயும் பலத்தினாலேயுங் காரணத்தினாலேயும் எங்கும் வியாபித்திருக்கிறவருமாய், எல்லாத்திற்கும் ஆதிகாரணமுமாய், யாவர்க்குங் கதியுமாய், பொல்லாதவர்களை நரகத்திலே தள்ளி நல்லவர்களுக்கு மோட்சம் கொடுக்கிறவருமாகிய பிதாச் சுதன் இஸ்பிரீத்துசாந்து என்னும் மூன்றாட்களாயிருந்தாலும் ஒரே சர்வேசுரனாயிருக்கிற என் ஆண்டவரே, தேவரீர் மாத்திரம் மெய்யான தேவனாயிருக்கிறபடியினாலே உமக்கு மாத்திரஞ் செய்யத்தக்க தேவாராதனையை உமக்கே செய்கிறேன். சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்ட புத்தியுடைத்தான வஸ்துகளுக்குள்ளே மேலானவளாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட மரியாயே, நீர் மோட்சவாசிகள் என்னப்பட்ட யாவரையும் பார்க்க எண்ணப்படாத நன்மைகளினாலே அதிசயித்துச் சர்வலோகத்துக்கும் இராக்கினியாயிருக்கிறதினாலேயும், எப்பொழுதும் பரிசுத்த கன்னியாஸ்திரியாயிருந்து மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனும் ஒன்றான சேசுநாதருக்குத் திவ்விய மாதாவாயிருக்கிறதினாலேயுஞ் சகலமான அர்ச்சியசிஷ்டர்களுக்குஞ் செய்யத்தக்க சாதாரண ஆராதனையைப் பார்க்க உமக்கு மாத்திரமே விசேஷ ஆராதனை செய்கிறேன். சகல மோட்சவாசிகளே, சர்வேசுரனைப் பிரத்தியட்ச தரிசனமாய்த் தரிசித்துக் கொண்டு ஆண்டவருக்கு உகந்தவர்களா யிருக்கிறபடியினாலேயும், நன்மையினாலே நிலைகொண்டவர்களா யிருக்கிறபடியினாலேயும், உங்களுடைய வேண்டுதல் மன்றாட்டுகளினாலே சர்வேசுரன் உங்களைக்கொண்டு எங்களுக்கு அநேக சகாய உபகாரங்களைச் செய்துகொண்டு வருகிறதினாலேயும், திருச்சபை கட்டளையிட்ட பிரகாரம் உங்களுக்கு ஆராதனை செய்கிறேன். சர்வேசுரா சுவாமீ, தேவரீர் என்னாத்துமத்தையுஞ் சரீரத்தையும் ஒன்றுமில்லாதிருக்கையிலே உண்டாக்கி, இந்த ஆத்துமமுஞ் சரீரமும் பிழைக்கிறதற்கு எண்ணப்படாத நன்மைகளைத் தந்தருளினதினாலே உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. பின்னையுந் தேவரீர் இந்தப் பூலோகத்திலே எனக்காக வந்து மனுஷாவதாரஞ் செய்து பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்ததினாலே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. மேலும் உம்முடைய திருமரணத்தினாலே வந்த அளவில்லாத பலனை எனக்கு ஞானஸ்நானத்தின் வழியாகக் கொடுத்தருளினீரே, சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. ஞானஸ்நானம் பெற்றபிற்பாடு நான் அநேகமுறை பாவங்களைச் செய்திருக்க அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீர்த்தன மூலமாகப் பொறுத்து, தெய்வீக போசனமாகிய நற்கருணையுங் கொடுத்து, எனக்கொரு காவல் சம்மனசையுங் கட்டளையிட்டு, இவை முதலான எண்ணிக்கைக்குள் அடங்காத சகாய உபகாரங்களைச் செய்து கொண்டு வருகிறதினாலேயும், விசேஷமாய் இந்த இராத்திரி காலத்திலே என்னாத்துமத் துக்குஞ் சரீரத்துக்கும் யாதொரு பொல் லாப்பு இல்லாமற் காத்திரட்சித்ததினாலே யும், என்னாற் கூடியவரையில் நன்றி யறிந்த மனதோடு தேவரீரை வணங்கித் தோத்திரஞ் செய்கிறேன். சுவாமீ உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. சர்வத்துக்கும் ஆண்டவரே, தேவரீர் என் சரீரத்தையும் பஞ்சேந்திரியங்களையும் அவை களிலே உண்டான தத்துவங்களையும் என் ஆத்துமத்தையும் அதிலேயுள்ள புத்தி நினைவு மனதென்கிற மூன்று புலன்களாகிய உள் ளிந்திரியங்களையும் எனக்குக் கொடுத்தருளி னீரே. இவை எல்லாந் தேவரீருக்குப் பிரிய மா யிருக்கி றதற்குச் சேசுநாதர் செய்த புண்ணியங்களோடேயுஞ் சகல அர்ச்சியசிஷ்டர்களுடைய தேவ வசீகரமான காணிக்கைகளோடேயுந் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். ஆனபடியினாலே இப்பொழுது துவக்கி மரணபரியந்தம் நான் செய்யும் தரும காரியங்கள் எல்லாத்தையுந் தேவரீருக்குத் தோத்திரமாக ஒப்புக்கொடுக்கிறேன். சர்வேசுரா சுவாமி, தேவரீருக்கு அளவில்லாத பலமும் மட்டில்லாத ஞானமும் அளவறுக்கப்படாத கிருபாகடாட்சமும் உண்டாயிருக்கிறபடியினாலே சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து, அடியேனுக்குந் திருச்சபைக்குஞ் சகலமான சனங்களுக்கும் வேண்டிய சகாயங்களைச் செய்கிறதுமல்லாமல் விசேஷமாய் நான் இன்று பாவங்களைச் செய்யாமற் புண்ணிய வழியிலே சுமுத்திரையாய் நடக்கத் தக்கதாகவும் எனக்கு அநுக்கிரகஞ் செய்தருளும் சுவாமி. சர்வேசுரா சுவாமீ, தேவரீர் அருளி செய்த வேத கற்பனையின்படியே அடியேன் சுமுத்திரையாய் நடக்கத் துணிந்திருக்கிறபடியினாலே என்னிடத்தில் இருக்கிற ஆங்காரங் கோபம் முதலிய விசேஷ துர்க்குணங்களை நீக்கி இன்று அநேக தருமங்களைச் செய்து வாக்கினாலேயுங் கிரிகையினாலேயுந் தாழ்ச்சி பொறுமை கற்பு முதலிய புண்ணியங்களை அடையப் பிரயாசைப்படுவேன். இவையெல்லாம் என்னுடைய பலத்தினாலே கூடாதே, பரிசுத்த தேவ மாதாவே, எனக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். என் காவலான சம்மனசானவரே, என்னைப் புண்ணிய நன்னெறியில் நடப்பித்துக் காத்தருளும். நான் பேர் கொண்டிருக்கிற அர்ச்சியசிஷ்டரே, உம்மைப்போல நான் இவ்வுலகத்திற் சர்வேசுரனைப் பத்தியோடு சேவிக்கவும் உம்மோடு அவரைப் பாலோகத்திலே தரிசித்துத் துதிக்கவுந் தேவகிருபை எனக்குக் கிடைக்கும்படியாக மன்றாடிக்கொள்ளும். *ஆமென்.* 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 *✝️இயேசுவே ஆண்டவர்✝️* *🙋🏻‍♂️தாய் மரியாயே வாழ்க🙋🏻‍♂️* 🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻 *🙏🏻பாவமன்னிப்பு ஜெபம்:🙏🏻* 🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻 என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். *🙏🏻ஆமென்🙏🏻* 💝🌺💝🌺💝🌺💝🌺💝🌺 *உத்தம மனஸ்தாப மந்திரம்,* 💝🌺💝🌻💝🌺💝🌻💝🌺 என் இறைவா தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதனால் எல்லாவற்றையும் பார்க்க உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன் இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களை செய்தேன் என்று மிகவும் மனம் நொந்து மெத்தமனஸ்தாப படுகிறேன் எனக்கு இதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபம் இல்லை எனக்கு இதுவே துக்கம் இல்லாமல் வேறு துக்கம் இல்லை இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறிதியான மனதுடனே பிரதிக்கனை செய்கிறேன் மேலும் எனக்கு பலம் போதாமையால் இயேசுகிறிஸ்து பாடுப்பட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரபிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன் திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் -- *🙏🏻ஆமேன்🙏🏻* 💕🙏🏻💕🙏🏻💕🙏🏻💕🙏🏻💕🙏🏻 *🌷நன்றியிருந்த தோத்திரம்🌷*  💕🙏🏻💕🙏🏻💕🙏🏻💕🙏🏻💕🙏🏻 சர்வேஸ்வரா சுவாமி, என்னை ஒன்றுமில்லாதிருக்கையிலே ஒரு மனிதனாக உண்டாக்கினீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. நான் செய்த பாவங்களினாலே நரகத்திற்குப் போகக் கடனுண்டாயிற்றே, அந்தக் கடனை என்னால் உத்தரிக்க இயலாதென்று தேவரீர் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு உத்தரித்தீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. அந்தப் புண்ணிய பலன்களையெல்லாம் ஞானஸ்நான முகாந்தரமாக எனக்குத் தந்தருளினீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. நான் ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு அநேக முறை பாவங்களைச் செய்தேனே, அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீர்த்தன முகாந்தரமாகப் பொறுத்து என்னை நரகத்திலே தள்ளாமல் மோட்சத்திற்குப் போகிற வழியிலே நிறுத்திக் கொண்டிருக்கிறீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. நீர் இன்றெனக்கு எண்ணிறந்த உபகாரங்களையெல்லாம் செய்ததுமல்லாமல், எனக்கு நேரிடவிருந்த அநேக தீமைகளையும் விலக்கினீரே - சுவாமி உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது.  நான் இன்று செய்த பாவங்களெல்லாம் என் நினைவிற்கு வரவும், அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய உதவியை அளித்தருளும் சுவாமி. *🙏🏻ஆமென்🙏🏻* 🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻 *மூவேளைச் செபம்:* 🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻 ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்; அவரும் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமானார் அருள் நிறைந்த இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும். அருள் நிறைந்த வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் அருள் நிறைந்த இயேசுகிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *செபிப்போமாக* 🔰🔰🔰🔰🔰🔰🔰 இறைவா ! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் உத்தானத்தின் மகிமையை அடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் பண்ணியருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் இயேசுகிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். *🙏🏻_ஆமென்_🙏🏻* 🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸 *விசுவாச மந்திரம்* 🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸 ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறேன். *🙏🏻ஆமென்.🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *இஸ்பிரீத்துசாந்து மந்திரம்:* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻 திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி! *🙏🏻ஆமென்🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *ஜெபிப்போமாக* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்லுகிறது. *பரலோகத்தில் இருக்கிற*... _பரிசுத்த கன்னியாஸ்த்ரீயாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிற வகையாவது:_ ✝️பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே _*தேவ விசுவாசம்*_ என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். *அருள் நிறைந்த*... ✝️சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே _*தேவ நம்பிக்கை*_ என்கிற புண்ணியம் உண்டாகி வளரும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். *அருள் நிறைந்த*... ✝️ இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே _*தேவ சிநேகம்*_ என்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். *அருள் நிறைந்த*... *பிதாவுக்கும் சுதனுக்கும்*... *ஓ என் இயேசுவே*... மேற்கண்ட ஜெபங்களை சொல்லி முடித்தபின் *ஆமென்* என்று​ பதில் வழங்கவும்! 🌾🌤️🌾🌤️🌾🌤️🌾🌤️🌾🌤️ *காலை மன்றாட்டு* 🌾🌤️🌾🌤️🌾🌤️🌾🌤️🌾🌤️ *அன்பே உருவான இறைவா....* *இந்த இரவு முழுவதும் உமது கண்ணின் மணியை போல் எங்களை காத்துக் கொண்டமைக்காகவும் இந்த புதிய நாளை எங்களுக்கு கொடுத்தமைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மூவொரு இறைவா நாங்கள் இன்று செய்யும் ஜெபங்களையும், செயல்களையும், நன்மைதனங்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை சகல ஆன்ம சரீர ஆபத்துகளிலிருந்தும், சாத்தானின் தந்திரங்களில் இருந்தும், தீமைகளின் பிடியில் இருந்தும் எங்களை தற்காத்து உமது பரிசுத்த ஆவியால் வழிநடத்தும். இயேசுகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெரும்படி சர்வேசுரனுடைய பரிசுத்த தேவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *அர்சிஸ்ட்ட சிலுவை, அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து, எங்களை இரட்சித்தருளும், எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே...* *ஆமேன்.* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
60 likes
1 comment 203 shares

More like this