Jayakannan
680 views 13 days ago
ஒரு கிரகம் ராகு கேதுவால் கிரகணமடைந்து. கிரகணம் அடைந்த கிரகத்தின் நேரடி தசா புத்தியில் ஒருவித பலனையும். கிரகணம் அடைந்த கிரகம் வேறு ஒரு கிரகத்துக்கு சாரம் கொடுத்திருந்தால் அதற்கு வேறு வித பலனையும். அல்லது வேறு ஏதேனும் ஒரு தசையில். கிரகணம் அடைந்த கிரகம் தனது புத்தியை நடத்தினால் அதற்கு வேறுவிதமான பலனையும் தரும். எப்படி.? கிரகணம் அடைந்த கிரகம், தனது தசா புத்தியிலும். வேறு ஒரு கிரகத்திற்கு சாரம் கொடுத்த வகையிலும். வேறு ஒரு தசா புத்தியில் கிரகணம் அடைந்த கிரகம் தனது புத்தியை நடத்தும்போதும். பெரும்பாலும் ஒரே பலனாக இருக்காது. சூழ்நிலைகளும் தன்மைகளும் வெவ்வேறு என்பதால்... வெவ்வேறு விதமான பலன்களையே அது தரும். அதன் நுணுக்கம் என்ன.? கிரகணம் அடைந்த கிரகத்தின் தசா புத்தி. அதாவது.. ஒரு கிரகம் ராகு அல்லது கேதுவின் பிடியில் சிக்கி கிரகணம் அடைந்திருக்கும் போது, அந்த கிரகத்தின் சொந்த தசா புத்தி நடக்கும் காலத்தில் பொதுவாக நற்பலன்கள் குறையும். இது பொது விதி. இதற்கு விதிவிலக்குகள் உண்டு. இதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் வேறு ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். இருந்தாலும்... தற்பொழுது கிரகணம் அடைந்த கிரகத்தின் தசா புத்தி நேரடியாக நடக்கும்போது ஆதிபத்திய ரீதியாகவும் காரகத்துவ ரீதியாகவும் மறைக்கப்படுவதால்.. நற்பலன் குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம். இதன்பலன்: குழப்பம், தடைகள், திடீர் நஷ்டங்கள் அல்லது ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். காரணம்: அந்த கிரகத்தின் காரகத்துவங்களும் ஆதிபத்திய பலன்களும் ராகு கேதுவின் நிழலால் மறைக்கப்பட்டு இருப்பதால் பலனும் மறுக்கப்படுகின்றன. இதுவே.... கிரகணம் அடைந்த கிரகம் வேறு ஒரு கிரகத்திற்கு சாரம் கொடுத்திருந்து. தசா புத்தி நடந்தால். பலன் மாறுபடும். காரணம்: தசா புத்தி நடத்தக்கூடிய கிரகம் நேரடி ராகு கேதுவின் பிடியில் இல்லை. கால் கொடுத்த கிரகமே ராகு கேதுவின் பிடியில் உள்ளது. எனவே.... தசை நடத்தக்கூடிய கிரகம் நல்ல ஆதி பத்தியத்திற்கு உரிய கிரகமாக இருந்து. நல்ல ஸ்தானங்களில் அமர்ந்து. நல்ல பலன்களை தரும் நிலையில் இருந்து.... ராகு கேதுவின் பிடியில் கிரகணமாகி. தசாநாதனுக்கு கால் கொடுத்த கிரகமும்... தனது பங்கிற்கு தசையை வலுப்படுத்த துடிக்கும் என்பது ஒரு விதி. மேலும் தசாநாதனுக்கு கால் கொடுத்த கிரகம் கிரகணம் ஆகி இருப்பதால்.... தீமை செய்ய வேண்டிய இடத்தில் நன்மையைச் செய்தும். அல்லது தீமை செய்ய வேண்டிய இடத்தில் தீமை செய்யாமல் இருக்கும்போது.. ஜாதகருக்கு அது விபரீத ராஜ யோகத்தை தரும். காரணம்: ஜோதிட விதிகளின்படி, "கிரகத்தை விட அது நின்ற சாரநாதன் பலம் வாய்ந்தவன்". கிரகணம் அடைந்த கிரகம் சாரம் கொடுக்கும்போது, ராகுவின் பிரம்மாண்டம் அதாவது பெரிதாக்குவது. அல்லது கேதுவின் மாயாஜாலம் அதாவது எதையும் அமானுஷ்ய முறையில் மாற்றி அமைப்பது. இந்த தன்மையை.... அந்த சாரம் வாங்கிய கிரகத்திற்கும் கடத்தும் போது விபரீத ராஜயோகமாக செயல்படுகிறது. அதேபோல.... கிரகணம் அடைந்த கிரகம் வேறு ஒரு தசையில் தனது புத்தியை நடத்தினால்.? அதற்குரிய பலன்: தசா நாதனின் பலம் அதிகமாக இருந்தால், இந்த கிரகணமான கிரகத்தின் புத்தியின் கெடுபலன்கள் பெருமளவு குறைந்துவிடும். காரணம்: தசா நாதனே தசையை நடத்தக்கூடிய முதலாளி. அவர் வலுவாக இருக்கும்போது, புத்தி நாதனான கிரகணம் அடைந்த கிரகம் பெரிய அளவில் தீமை செய்ய முடியாமல் தசாநாதனுக்கு கட்டுப்படும். சுருக்கமாக: ராகு கேதுவால் கிரகணம் அடைந்த கிரகம் நேரடியாகச தசா புத்தியை நடத்தும்போது பலவீனமாக இருக்கும் என்கிற ஒரு கூற்று உண்டு. ஆனால்,. அதுவே... வேறு கிரகத்திற்கு சாரம் கொடுக்கும்போது.... மிக விசித்திரமான, பிரம்மாண்டமான அல்லது மறைமுகமான வெற்றிகளையும் தரும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628
9 shares

More like this