⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
அறுபடை வீடும் ஆளும் அழகனே
ஆறுமுகம் கொண்ட அருள் வடிவே
தங்கமாய் ஜொலிக்கும் திருவடிவே
கருப்பாய் கருணை காட்டும் கடவுளே
வெள்ளியாய் மின்னும் வேலவனே
கையில் வேல் ஏந்தியவனே
காலடியில் மயில் நிற்க
கழுத்தில் மாலை சூடியவனே
திருப்பரங்குன்றம் முதல்
திருச்செந்தூர் வரை
பழனி, சுவாமிமலை
திருத்தணி, பழமுதிர்சோலை
அறுபடையும் சொத்தாக்கியவனே
தெய்வானையும் வள்ளியும்
இருபுறம் நிற்க
நடுவில் ராஜா போல் அமர்ந்தவனே
காவடி ஏந்தும் நெஞ்சம் எல்லாம்
உன் தேகமாக பார்ப்பவனே
பக்தன் கண்ணீரை துடைக்கும்
அன்பு தெய்வமே
வேல் உண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
கந்தா உண்டு கலக்கமில்லை
ஒரு முறை "வேல் வேல்" என்றால்
ஒரு கோடி பாவமும் பறந்தோடும்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏 #god