💖சிவா 💖
547 views • 4 days ago
#🎬செல்வராகவனின் படங்கள்
நம்ம எல்லாருமே '7G ரெயின்போ காலனி'ல இருந்து நினைத்து நினைத்து பார்த்தேன் பாட்ட கேட்டிருப்போம்..
இதுல இந்த ஒரு லைனை நீங்க நோட் பண்ணீங்களா?
"தொடர்ந்து வந்த நிழலும் இங்கே... தீயில் சேர்ந்து போகும்...!!
இவ்வளவு நாள், இவ்வளவு காலம் உன்கூட தொடர்ந்து வந்த உன்னுடைய நிழல் கூட, இப்போ நீ சாகும்போது அதுவும் சேர்ந்து எரியுது...!!
அதே மாதிரி, 'திருட்டுப் போன தடயம் பார்த்தும்... நம்பவில்லை நானும்'..!!
அந்த எமன் உன்னுடைய உயிரைத் திருடிட்டுப் போயிட்டான். எனக்குச் சொந்தமான உன்னுடைய உயிரைத் திருடிட்டுப் போயிட்டான். அதுக்கான தடயம் எல்லாமே இருக்கு இப்போ. நீ இறந்துட்டேன்னு எல்லாரும் சொல்றாங்க, எனக்கும் தெரியுது. ஆனாலும், அதை நம்பவில்லை நானும்...!!!! என்னால அதை நம்ப முடியல, நான் நம்பல...!!
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாய்... என்றே வாழ்கிறேன்... அப்படின்னு இருக்கும். ஒரு தருணம் எதிரில் தோன்றுவாய்னு... ஒரு தவிப்பு இருக்கும் அதுல. அதை அப்படியே நா.முத்துக்குமார் அதுல சொல்லிருப்பார்
Siva 🌹🌹🌹🌹
3 shares