A Mohan Raj
1K views • 12 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது.
*இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏
*இன்றைய பதிவில் 201 முதல் 250 வரையிலான பாடல்கள்*
பாடல் வரிகள் :
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல்
குளம் தரு தண்ணீர்ப்
பந்தர் பல ஆண்ட அரசு
எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு
அவர் தம் மனை நண்ண. 201
மற்றவரும் மனம் மகிழ்ந்து
மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூரத் தொழுது
எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக்
குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர்
திரு உள்ளம் பெறப் பெற்றார். 202
காண்டகைமை இன்றியுமுன் கலந்த
பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன்
போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள்
பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செயத்
திரு அமுதாம் படி அமைத்து. 203
திருநாவுக்கரசு அமுது செய்து
அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை
அழைத்து அன்பு
தருஞானத் திருமறையோர்
தண்டலையின் வண்கதலிக்
குரு நாளக் குருத்து அரிந்து
கொண்டு வர தனிவிட்டார். 204
ஆங்கு அவனும் விரைந்து
எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலிக் குருத்து அரியப்
புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான்
திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு
ஒல்லை வந்து அணைந்தான். 205
தீய விடம் தலைக் கொள்ளத்
தெருமந்து செழும் குருத்தைத்
தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து
தனைத் தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழக்
கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செயத்
தொடங்கார் என்று அது ஒளித்தார். 206
தம் புதல்வன் சவம்
மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய
வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து
அருளி நவை தீர்ப்பார். 207
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு
அளவு இறந்த கருணையராய்க்
கொன்றை நறும் சடையார் தம்
கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம்
எடுத்து உடையான் சீர் பாடப்
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை
உணர்ந்து எழுந்து இருந்தான். 208
அரும் தனயன் உயிர் பெற்ற
அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர்
உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனைப்
புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி
விருப்பினுடன் மேவும் நாள். 209
திங்களூர் தனில் நின்றும்
திருமறையோர் பின் செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர்
திருப்பழனப் பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும்
தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன்
நின்று போற்றி இசைப்பார். 210
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார்
பொன் கழல் கீழ்
அடை மாலைச் சீலம் உடை
அப்பூதி அடிகள் தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மை
புரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச்
சொன்மாலை பாடினார். 211
எழும் பணியும் இளம்பிறையும்
அணிந்தவரை எம் மருங்கும்
தொழும்பணி மேற் கொண்டு அருளி
திருச்சோற்றுத் துறை முதலாத்
தழும்புறு கேண்மையில் நண்ணித்
தானங்கள் பல பாடிச்
செம்பழனத்து இறை கோயில் திருத்
தொண்டு செய்து இருந்தார். 212
சால நாள் அங்கு அமர்ந்து
தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி
மலர்ச் சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னித்
தென்கரை ஏறிச் சென்று
கோல நீள் மணி மாடத்
திரு நல்லூர் குறுகினார். 213
அங்கு அணைந்து தம் பெருமான்
அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி
இசைத்துப் பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால்
தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார்
திருவாரூர் தொழ நினைந்தார். 214
நல்லூரில் நம்பர் அருள்
பெற்றுப் போய்ப் பழையாறை
பல்லூர் வெண்டலைக் கரத்தார்
பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ்
சுழியைத் தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார்
திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி. 215
நாலூர் தென் திருச்சேறை
குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள்
பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடைக் கொடியார் மேவும்
இடம் பல பாடிக்
சேலூர் தண் பணை சூழ்ந்த
தென் திரு வாஞ்சியம் அணைந்தார். 216
பெருவாச மலர்ச் சோலைப் பெரு
வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர்க் கொன்றை
முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று
இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம்
திருவாரூர் வந்து அடைந்தார். 217
ஆண்ட அரசு எழுந்தருள
ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால்
நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம்
கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலியத்
திரு மலி மங்கலம் செய்தார். 218
வேறு - கட்டளைக் கலித்துறை (ஐந்துசீர்)
வல் அமண் குண்டர் தம்
மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில்புறம்
சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுது உரைசெய்து அணைவார். 219
பற்று ஒன்று இலாவரும் பாதகர்
ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப்
போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியம் என்று
உற்ற உணர்வொடும் ஆரூர்த்
திருவீதி உள் அணைந்தார். 220
சூழும் திருத்தொண்டர் தம்முடன்
தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன்
முன் வந்து இறைஞ்சி
ஆழி வரைத் திரு மாளிகை
வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணிப் புற்று
உகந்தாரை நேர் கண்டு கொண்டார். 221
கண்டு தொழுது விழுந்து கர
சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து
அன்பு கூரக் கண்கள்
தண்துளி மாரி பொழியத்
திரு மூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல்
போற்றித் திருத்தாண்டகம் புனைந்து. 222
காண்டலே கருத்தாய் நினைந்து
என்னும் கலைப் பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி
முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணிக் கோயில் சூழ
வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள்
திருவாயில் புறத்து அணைந்தார். 223
வேறு - அறுசீர் விருத்தம்
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்முன்
தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ
மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக்
காய்கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கையறவால் திருப்பதிகம்
அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே. 224
மார் பாரப் பொழி கண்ணீர்
மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின்
மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார் வாழத் திரு வீதிப் பணி
செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார். 225
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு
மணிப்புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும்
பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம்
கரைந்து உருகி நயந்து செல்வார். 226
நான் மறைநூல் பெருமை நமி நந்தி
அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரைப் பரமர்
திருவிருத்தத்துள் வைத்துப் பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர்
அரன் நெறியில் திகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப்
பணி செய்து அங்கு அமரும் நாளில். 227
நீர் ஆரும் சடை முடியார் நிலவு
திருவலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை
பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ்
வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர் தனில்
மீண்டும் அணைந்தார் அன்றே. 228
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்
பெருமான் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன்
சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை
முறைமை யெலாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனி அரசர்
நயக்குநாள் நம்பர்திரு அருளினாலே. 229
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ
பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும்
காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது
அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப் பாவை இடப்பாகர்பதி
பிறவும் பணிந்து போந்தார். 230
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி
அதன் கண் நின்றும்
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற
திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர்
வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல்
முருகனார் திருமடத்தில் மேவும் காலை. 231
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி
ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக்
கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு
அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை
சூழ எழுந்து அருளி எதிரே சென்றார். 232
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன்
எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி
வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர்
குழாம் இருதிறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி
அணைந்த போல் இசைந்த அன்றே. 233
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச்
சிரபுரத்துத் தெய்வ வாய்மை
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை
வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை
அவரும் எதிர் அருளிச் செய்தார். 234
வேறு - சந்தக் கலித்துறை (ஐந்துசீர்)
சித்தம் நிலாவும் தென்
திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என்
மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன்
கவரி மொழி மாலை. 235
அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து
அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவித் தென்
திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன்
அமர்வேன் என்று உரை செய்தார். 236
மா மதில் ஆரூர் மன்னரை
அங்கு வணங்கச் செந்
தாமரை ஓடைச் சண்பையர்
நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும்
ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண்
பணை சூழும் புகலூரில். 237
அத் திரு மூதூர்
மேவிய நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண்
பொழி நீர் மெய்ம் முழுதாரப்
பைத் தலை நாகப் பூண்
அணிவாரைப் பணி உற்றார். 238
தேவர் பிரானைத் தென்
புகலூர் மன்னிய தேனைப்
பா இயல் மாலைச்
செந்தமிழ் பாடிப் பரிவோடு
மேவிய காலம் தோறும்
விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்து அங்கு உறைகின்றார். 239
சீர் தரு செங்காட்டங்
குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை
சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான்
ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால்
சென்று வணங்கி இன்புற்றார். 240
அப்படிச் சின்னாள் சென்ற பின்
ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணிக் கண்
நுதலாரைத் தொழுது இப்பால்
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்து எங்கள்
பொன் புரி முந்நூல்
மார்பரும் வந்தார் புகலூரில். 241
வேறு - கொச்சகக் கலிப்பா
பிள்ளையார் எழுந்து அருளப்
பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு
அங்கு உடன்உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று
அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல
நக்கர் தாமும் எழுந்து அருளினார். 242
ஆங்கு அணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார்
திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார்
பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத் தொண்டின்
நிலை உணர்ந்து நிகழ்கின்றார். 243
திருப் பதிகச் செழுந்தமிழின்
திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்
பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர்
பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன்
உறைவின் பயன் பெற்றார். 244
அந் நாளில் தமக்கு ஏற்ற
திருத் தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும்
பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி
முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம்
புகலூர் தொழுது அகன்றார். 245
திரு நீல நக்க
அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும்
விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து
உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார்
திரு அம்பர் வணங்கினார். 246
செங்குமுத மலர் வாவித்
திருக்கடவூர் அணைந்து அருளிப்
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன்
அடிகள் தொழுது ஏத்திக்
குங்குலியக் கலயனார் திருமடத்தில்
குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன்
அடியாருடன் அமுது செய்தார்கள். 247
சீர் மன்னும் திருக்
கடவூர்த் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல
பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறைக் கண்டர்
கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதித்
திரு ஆக்கூர் சென்று அணைந்தார். 248
சார்ந்தார் தம் புகல் இடத்தைத்
தான் தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து
கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்ந்து ஆடும் சடையார் தம்
பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான்
திரு வீழி மிழலையினை. 249
வேறு - அறுசீர் விருத்தம்
வீழி மிழலை வந்து அணைய
மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர் கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார். 250
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
20 shares