A Mohan Raj
1K views 12 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 201 முதல் 250 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண. 201 மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார். 202 காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து. 203 திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார். 204 ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான். 205 தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார். 206 தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார். 207 அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான். 208 அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள். 209 திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார். 210 புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார். 211 எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார். 212 சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார். 213 அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார். 214 நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி. 215 நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக் சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார். 216 பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார். 217 ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார். 218 வேறு - கட்டளைக் கலித்துறை (ஐந்துசீர்) வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார். 219 பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார். 220 சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார். 221 கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து. 222 காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார். 223 வேறு - அறுசீர் விருத்தம் செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்முன் தேவ ஆசிரியன் சார்ந்து கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக் கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் என்று எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே. 224 மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார். 225 நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார். 226 நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்தத்துள் வைத்துப் பாடி தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் திகழும் தன்மை ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில். 227 நீர் ஆரும் சடை முடியார் நிலவு திருவலி வலமும் நினைந்து சென்று வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே. 228 மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமான் பவனி தன்னில் தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி நாவினுக்குத் தனி அரசர் நயக்குநாள் நம்பர்திரு அருளினாலே. 229 திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் பொருப்பரையன் மடப் பாவை இடப்பாகர்பதி பிறவும் பணிந்து போந்தார். 230 அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும் பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காலை. 231 ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார். 232 கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இருதிறமும் சேர்ந்த போதில் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே. 233 திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார். 234 வேறு - சந்தக் கலித்துறை (ஐந்துசீர்) சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை. 235 அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார். 236 மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில். 237 அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப் பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார். 238 தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார். 239 சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார். 240 அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில். 241 வேறு - கொச்சகக் கலிப்பா பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன்உறையும் நாளின்கண் வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார். 242 ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப் பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார். 243 திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப் பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார். 244 அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார். 245 திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார். 246 செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள். 247 சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார். 248 சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து வார்ந்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை. 249 வேறு - அறுசீர் விருத்தம் வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார். 250 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
20 shares

More like this