꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
#🌎பொது அறிவு
*🌹புரட்சித் தளபதி சந்திர சேகர ஆசாத்தான் 115ஆவது பிறந்த நாள் இன்று*🌹
“ உன் பெயர் என்ன”
“ என் பெயர் ஆசாத் (விடுதலை)”
“ உன் அப்பா பெயர் என்ன”
“ சுதீன் (சுதந்திரம்)”
“ உன் வீடு எங்கே இருக்கிறது”
“ சிறைச்சாலையில்”
இப்படி நீதிமன்றத்தில் பதில் கூறிய இளைஹனுக்கு வயது பதினான்கு. அவர் பெயர் சந்திர சேகர ஆசாத்.
பதினான்கு வயது என்பதால் நீதிமன்றம் அவருக்குப் பதினைந்து கசையடித் தண்டனை அளித்தது. கசையடிகளைத் தாங்கிக் கொண்டு வெளியே வரும்போது “வந்தே மாதிரம்”, “மகாத்மா காந்திஜிக்கு ஜே” என்று முழக்கமிட்டார். இது நடந்தது 1922 ஆம் ஆண்டு.
மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டம், சாடுவா தாலுகா, பாவ்ரா கிராமத்தில் பண்டிட் சீதாராம் திவாரி - ஜெகராணி தேவி தம்பதியினருக்கு 1906 ஆம் ஆண்டு ஜிலை 23 ஆம் நாள் பிறந்தார்.
பதினான்கு வயதில் இந்திய விடுதலைப் போரில் குதித்தார். பத்தாண்டுகள் இடைவிடாது வீரமுடன் போராடினார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாற்கு பரம வைரியாகவும், சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். விடுதலைக்கானப் போரில் தனது இருபத்து நான்காவது வயதில் தியாகியானார்.