Arunachalam
773 views • 1 days ago
தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 2: மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் (Transmission) தனியார் நுழைய அனுமதி
மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கும் தவெக அரசின் PPP திட்டம், பொதுப் பணத்தில் உருவாக்கப்பட வேண்டிய மின்சார உள்கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் நீண்டகால வருவாயைத் தனியாருக்கு உத்தரவாதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசிடம் பணம் இல்லை என்ற காரணத்தை முன்வைக்கும் அரசு, தனியார் நிறுவனங்கள் கடன் பெற்று முதலீடு செய்து உருவாக்கும் கட்டமைப்புக்கான கடனையும், வட்டியையும், இலாபத்தையும் இறுதியில் மக்கள் மின் கட்டணமாகச் செலுத்தும் நிலையை உருவாக்குகிறது. மின்சார உற்பத்தியில் தனியார்மயத்தால் ஏற்பட்ட சுமையைத் தொடர்ந்து, தற்போது மின் பரிமாற்றக் கட்டமைப்பிலும் தனியார்மயத்தின் அடுத்த கட்டம் தொடங்குகிறது.... #👨மோடி அரசாங்கம்
6 shares