S.ANTHONY✝️YESUMARY
1K views 2 days ago
*அனைத்து புனிதர்களை நோக்கி ஜெபம் மற்றும் மன்றாட்டு மாலை.* ⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️ *அனைத்து புனிதர்களை நோக்கி ஜெபம்* _______________________________ அன்புள்ள , புனிதர்களே.. உங்களின் முன்மாதிரிக்கு நன்றி. நான் உங்களுடன் சேர்ந்து, பரலோகத்தில் என்றென்றும் கடவுளை வணங்க விரும்புகிறேன். இறைவனில் வாழும் புனிதர்களே... தயவுசெய்து உங்களின் அடிச்சுவடுகளையும், இயேசுவின் வழியையும் பின்பற்ற எனக்கு உதவுங்கள். நீங்கள் செய்தது போல், எல்லாவற்றிலும் இறைமகன் இயேசுவின் சித்தத்தைத் தேடி, இயேசுவின் சாயலுக்கு என்னை இணங்க வைக்க எனக்கு உதவுங்கள். தயவுசெய்து, என்னையும், நான் செய்யும் அனைத்தையும், இயேசுவின் மகிமைக்காகவும், என் அண்டை வீட்டாரின் சேவைக்காகவும், உலக மாந்தர் அனைவருக்காகவும் அர்ப்பணிக்க எனக்கு உதவுங்கள். ஆமென். ⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️🌸⚜️ *புனிதர்களின் மன்றாட்டு மாலை* _______________________________ ஆண்டவரே இரக்கமாயிரும் -2 கிறிஸ்துவே இரக்கமாயிரும் -2 ஆண்டவரே இரக்கமாயிரும் -2 புனித மரியாயே .. இறைவனின் தாயே புனித மிக்கேலே.. இறைவனின் புனித தூதர்களே.. புனித திருமுழுக்கு யோவானே... புனித சூசையப்பரே... புனித இராயப்பரே புனித சின்னப்பரே... புனித அருளப்பரே... புனித மதலேன் மரியம்மாளே.... இறைவனின் அனைத்து சீடர்களே... புனித ஸ்தேபானே... புனித லாரன்சே... புனித ஆஞ்ஞேசம்மாளே... *இறைவனின் அனைத்து மறைசாட்சிகளே..* புனித பசிலியாரே... புனித அகுஸ்தினாரே... புனித ஆசீர்வாதப்பரே... புனித பெர்னாந்துவே... புனித பிரான்சிஸ் அசிசியாரே.. புனித சுவாமிநாதரே... புனித அக்குவினாஸ் தோமையாரே... புதின சிலுவை அருளப்பரே... புனித ஜோவான்னி ... லியோனார்தியே... புனித பிலிப்பு நேரியாரே.. புனித லயோலா இஞ்ஞாசியாரே... புனித பதுவை அந்தோணியாரே... புனித கலசான்ஸ் சூசையப்பரே... புனித பிரான்சிஸ் சவேரியாரே... புனித ஜான் போஸ்கோவே... புனித அவிலா தெரசம்மாளே... புனித குழந்தை யேசு தெரசம்மாளே... புனித கித்தேரியம்மாளே.. இறைவனின் எல்லா புனிதர்களே, புனிதையரே.. கருணைகூர்ந்து... *எங்களை மீட்டருளும் ஆண்டவரே* தீமை அனைத்திலுமிருந்து.. பாவம் அனைத்திலுமிருந்து.... முடிவில்லா சாவிலிருந்து.... உமது மனுவுடலேற்பினாலே... உமது இறப்பினாலே உயிர்பினாலே... தூய ஆவியின் வருகையினாலே... பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் -எங்கள் மன்றாட்டை கேட்டருளும். உமது ஊழியர்களின் பணியாலும், கொடைகளாலும், உமது திருச்சபையின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் அடியார் திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், ஆயர்கள் மற்றும் அனைத்து அதிபர்களையும் உமது தூய ஆவியின் கொடைகளால் நிரப்ப வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். துறவியரின் வாழ்வும் பணியும் மனித குல முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். அனைத்து துறவற சபையினரும் கிறிஸ்துவின் அன்பிலும், தங்கள் நிறுவுனரின் வழியிலும் வாழவும், வளரவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இறையன்னை சபையினர் தங்கள் நிறுவனரான தூய ஜான் லியோனார்தியின் நிரந்தர சீர்திருத்தத்தின் தனிகொடையை வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். தங்கள் பிள்ளையை இறைபணிக்காக அளித்திட்ட இவர்களின் பெற்றோர்களை உமது நிறைவான ஆசீரினால் ஈடுசெய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இன்று தங்கள் வாழ்வை உமக்கு அர்ப்பணம் செய்யும் இந்த சகோதரர்களை கிறிஸ்துவைப்போல் வாழ செய்யவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் அடியார்ராகிய இவர்கள் தங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருக்க அருளும் ஆற்றலும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த எங்கள் சகோதரர்களை ஆசீர்வதித்து அர்ச்சித்து, அர்ப்பணிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உயிருள்ள இறைவனின் திருமகனான இயேசுவே உம்மை மன்றாடுகிறோம். கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்த்தருளும் -2 கிறிஸ்துவே தயவாய் செவிசாய்த்தருளும் -2 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
17 likes
15 shares

More like this