Babu Babuji
705 views 19 days ago
ஒருமுறை காமராஜர் காரில் சென்று கொண்டிருந்த போது அன்றையக் கடும் மெட்ராஸ் வெயிலில் இளைஞர் ஒருவர் நடக்க முடியாமல் நடந்து சென்றதைக் கண்டார். அவனுக்குத் தன் காரில் லிஃப்ட் கொடுத்தார். தன் பெயர் ராமசாமி என அறிமுகம் செய்து கொண்ட அந்த இளைஞன் தான் சினிமா வாய்ப்புகள் தேடி அலைவதாகவும் தனக்கு நாடக மேடைகளில் நடித்த அனுபவம் நிறைய இருக்கிறதாகவும் சொன்னான். அடுத்தநாள் அவனைத் தன் அலுவலகம் வரச் சொன்ன காமராஜர் தன்னிடம் மிகுந்த அன்பு கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் வரவழைத்தார் இந்த இளைஞனுக்கு உதவச் சொல்லி. சிவாஜியோ, "தலைவரே.. இந்தப் பயபுள்ள என்னோட நாடகத்திலும் வேலை பார்த்திருக்கான்.. துருதுருன்னு இருப்பானே.. நீங்க சொல்லிட்டீங்கள்ள.. அப்புறம் என்ன?!" என்றவாரே தான் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த 'நிறைகுடம்' என்ற படத்தின் கதை-வசனம் எழுதும் வேலை வாங்கிக் கொடுத்தார். அது இயக்குநர் மகேந்திரன் அவர்கள் எழுதிய திரைக்கதை. அன்றைய திரையுலக பிரபலம் கலைஞர் கதை-வசனம் எழுதுவதாக இருந்தது, இந்தப் புது இளைஞன் கைவசம் சென்றது காமராஜரால். கடுங்கோபத்திற்கு ஆளான கலைஞர் படப்பிடிப்பு செட்டுக்கே வந்து "இந்த இளைஞன் மட்டும் இன்றைய சீன் காட்சியமைப்பிற்கு என் அளவுக்கு வசனம் எழுதட்டும் பார்க்கலாம்" என அங்கேயே உட்கார்ந்து விட்டார். நடிக்க மட்டுமே தெரிந்த அந்த இளைஞன் ராமசாமிக்கோ வசனகர்த்தா வேலை முற்றிலும் புதிதான ஒன்று. கை நடுங்க ஆரம்பித்தது அவனுக்கு. விசயம் பெருந்தலைவர் காமராஜர் காதுக்குப் போனது. தன் மீது பேரன்பு கொண்ட கவிஞர் கண்ணதாசனை அந்த இளைஞனுக்கு உதவ அனுப்பினார். கோபத்துடன் உட்கார்ந்திருந்த கலைஞர் கண்பார்வையில் படாமல் நைஸாகச் செட்டுக்குள் நுழைந்த கண்ணதாசன் அன்றைய காட்சிகளுக்குத் தேவையான வசனங்களை எல்லாம் அருமையாக எழுதிக் கொடுத்து அசத்தினார். அந்த இளைஞனுக்கும் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். வசனங்களைப் படித்த கலைஞரோ திருடனுக்குத் தேள் கொட்டியது போல் ஒன்றுமே சொல்லாமல் அந்த இடத்தை விட்டகன்றார். அவ்வளவு அருமையாக இருந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நடிகர் திலகம் சிவாஜி. படமோ சூப்பர் டூப்பர் வெற்றி. அந்தப் படத்தில் அடிக்கடி So.. So.. So.. என்பதை Cho.. Cho.. Cho.. என சிவாஜி தன் ஸ்டைலில் உச்சரித்த டயலாக்குகள் பட்டிதொட்டியெங்கும் பட்டையக் கிளப்ப வசனம் எழுதிய இளைஞன் ராமசாமியோ சோ ராமசாமி எனத் திரையுலகப் பிரபலம் ஆனான். காமராஜரின் அந்த உதவியை என்றும் மறக்காத சோ. ராமசாமி அவரது இறுதிக் காலம் வரைக்கும் துணை நின்றார் தூணாக. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் எனக் "காலா காந்தி" காமராஜர் பற்றி அன்றைய குஜராத் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நரேந்திர மோதியிடம் பகன்றார் சோ. ராமசாமி.. அதுவரை அரசியல் பதவிகளில் எந்தவித ஆர்வமும் தனக்கு இல்லாமல் இருந்த நரேந்திர மோதிக்கு காமராஜர் போன்ற ஒப்பற்ற தலைவனாகி நாட்டை உயர்த்த வேண்டும் என உத்வேகம் உருவானது. முதல்வரானார், பிரதமரானார்.. உலகத் தலைவர் ஆனார். தாய்நாட்டைக் காத்தார். காத்துக் கொண்டிருக்கிறார் காவல் தெய்வமாக. இதற்கு விதை போட்டது நம் பெருந்தலைவரின் நற்குணமே. 🙏🔥 வாழ்க காமராஜர்.. வளர்க அவர் புகழ். 🌷 ~ ஜெய்ஜி #👉வாழ்க்கை பாடங்கள் #😊Positive Stories📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺
14 shares

More like this