செ.சாா்லஸ் செபஸ்டின்
492 views • 8 hours ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய வசனம் #இன்றைய இறைவார்த்தை காலை ஜெபம்*
"என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே".
(திருப்பாடல் 18: 1-3, 46, 50)
ஆண்டவரே! நான் விழித்தெழும்போது, உம்மைப் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். ஆராதிக்கிறேன். உம்மை நோக்கி செபிக்கும் இவ்வேளையில், உம் அருகாமையை நான் உணர்கிறேன். உம் பிரசன்னம் கண்டு, நிறைவு பெறுகிறேன்.
இறைவா! உமது கண்ணின் மணியென, என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில், என்னை மூடிக்கொள்ளும்.
இனிய இயேசுவே! பல நேரங்களில் எனக்கு எதிராக பாவம் செய்தவர்களை, மன்னிக்க மறுக்கும் எனது கடின உள்ளத்திற்காக மனம் வருந்துகிறேன். ஏனெனில், "உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்" என கூறியுள்ளீர். மேலும், பிறரை ஏழு முறை மட்டுமல்ல, எழுபது ஏழு முறை மன்னிக்க சொல்லியுள்ளீர்.
இறைவா! அன்று திருத்தூதர்கள் உம்மைக் கேட்டது போல, இன்று உம்மிடம் பணிவன்புடன் கேட்கிறேன். என்னுடைய நம்பிக்கையை மிகுதியாக்கும். ஏனெனில், என் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளும், சூழ்நிலைகளும் அவ்வப்போது எனது நம்பிக்கையை குறைக்க, காரணமாகி விடுகின்றன. எச்சூழலிலும், நான் நம்பிக்கையைக் கைவிடாதிருக்க அருள் புரிவீராக.
இறைவா! இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நீர்தாமே ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில் இருக்கிற ...(1)
அருள் நிறைந்த....(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*
9 likes
24 shares