A Mohan Raj
2K views 8 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்* திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது. *இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏 *இன்றைய பதிவில் 401 முதல் 429 வரையிலான பாடல்கள்* பாடல் வரிகள் : பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார். 401 ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார். 402 சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார். 403 எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார். 404 சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார். 405 திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார். 406 கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் நெடியானுக்கு அறிவு அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார். 407 தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர். 408 தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால் பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார். 409 அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார். 410 தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார். 411 தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார். 412 பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில் கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன் வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார். 413 நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார். 414 ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும் நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார். 415 அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார். 416 செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார். 417 புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார். 418 வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார். 419 கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப் பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார். 420 ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார். 421 இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார். 422 இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார். 423 மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார். 424 இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் மின் நிலவும் சடையார் தம் மெய்ப் பொருள் தான் எய்த வரும் அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார். 425 மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார். 426 மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார். 427 வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில். 428 அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன். 429 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
47 shares

More like this