Arunachalam
641 views • 1 days ago
இன்னைக்கு நம்ம லாட்டரி செம்மல் அமைச்சர் ஆதவ் அவர்கள் தெம்பு இருந்தா தைரியம் இருந்தானு சட்டமன்றத்தில் கத்திட்டு இருந்தாரு. என்னோட மாமனர்ட்ட இருந்து ஏன் பணம் வாங்கினிங்க அத சொல்லுங்கனு கத்திட்டு இருந்தாரு. தேர்தல் நிதியா எந்த நிறுவனமும் எந்த கட்சிக்கும் தேர்தல் நிதி அல்லது அன்பளிப்பு தரலாம் என்பது இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கும் வாய்ப்பு. எல்லா கட்சிகளும் அப்படி வாங்கித்தான் செலவழிக்கிறது.
Santiago Martin-ன் Future Gaming and Hotel Services என்ற நிறுவனம் தான் 1368 கோடிக்கு தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கியிருக்கிறது. இதுதான் இந்தியாவிலே அதிக பட்சம்.
TMC - ரூ.542 கோடி
DMK - ரூ.509 கோடி
YSR Congress - சுமார் ரூ.160 கோடி
BJP - ரூ.100 கோடி
Congress - ரூ.50 கோடி.
இது போக கணக்கில் இல்லாத வகையில் பிஜேபிக்கு பணம் கொடுத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் கட்டுரை வெளியிட்டும் இருந்தது.
இத்தனை கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பெற்றிருக்கிறது. இதில் ஏதும் கருப்பு வெள்ளை எல்லாம் கிடையாது முறையான தணிக்கைக்கு பின்னர் கொடுத்தது. அவர் கேட்க வேண்டியது தேர்தல் ஆணையத்தை தான். அவ்வளவு ஏன் டிவிகே கட்சியின் கரூர் படுகொலைகளுக்கு இழப்பீடு நிதி எந்தெந்த கணக்குகளில் இருந்து சென்றது என்பதை விவாதிக்க முடியுமா ஆதவால் ? ஆதவ் செலவழிக்கும் பணம் எல்லாம் கட்சி கணக்கில் வரும் தானே ? அன்பளிப்பில் தானே அதுவும் வரும். என்ன ஆதாயத்திற்கு அவர் கொடுத்து வருகிறார் .
ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான Jose Charles, "ஆதவ் எனது தந்தையின் பணத்தை தவறாக பயன்படுத்துவதோடு எங்கள் குடும்பத்திற்கும் அவபெயரை ஏற்படுத்துகிறார்" என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதற்கு இவர் தைரியமால பதில் சொல்லியிருக்கிறாரா ?
திமுக மார்டினை ஏமாற்றி பணம் வாங்கியிருக்கிறது என்றால் மகன் பாண்டிச்சேரி எம் எல் ஏ, மனைவி அதிமுக எம் எல் ஏ கூடுதலாக மருமகன் டிவிகே அமைச்சர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே ? அந்த வக்கு இருக்கிறதா ? குடும்ப அரசியலை பேசும் ஆதவிற்கு ஒரே குடும்பம் வெவ்வேறு கட்சிகளில் பணத்தை முதலீடு செய்து பிழைப்பது தெரியும் தானே ? அது பற்றி அவர் பேசுவாரா ?
சட்டமன்றத்தில் ஸ்டாலினை அவமானப்படுத்த வேண்டும், திமுகவை பற்றி அவதூறு செய்ய வேண்டுமென்ற அதே பழைய மயிலாப்பூர் டெக்னிக் தான் ?
ஆனால் இதெல்லாம் செருப்பால் கழட்டி அடித்து விரட்டப்பட டெக்னிக். தேர்தல் அறிவிப்பில் அள்ளிவிட்ட பொய்களை மூட இப்படியொரு கதறல்.
பா. சரவணகாந்த். #👨மோடி அரசாங்கம்
13 likes
15 shares