Makkal Mugam
6K views 3 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மேல வீராணம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம்.... தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மேல வீராணம் ஊராட்சியில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக ஊராட்சி மன்றத் தலைவர் ப. கருப்பசாமி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ப. கருப்பசாமி அவர்கள் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர் சு. முப்பிடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ், தலையாரி மாரியப்பன், நியாய விலைக்கடை அலுவலர் ரேவதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா ஞானசீலா, ஆசிரியர் ராஜேந்திரன், சோனல் உஷா, வார்டு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, சங்கரன், மாரியம்மாள் அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி, பணித்தளப் பொறுப்பாளர் பிரியா, சுகாதார ஊக்குனர் செல்வராணி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
74 shares

More like this