#👩நடிகை திரிஷா😍 #ரெங்கா! #renga-vamba! தமிழக கலைத்துறைக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துள்ள திரிஷா 🎉 கடந்த 2015-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது அவர் கமலுடன் இணைந்து ‘தூங்காவனம்’ படத்தில் நடித்திருந்த நேரம் அது. ஆனால், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று 5 மாதங்களில் த்ரிஷாவின் திருமணம் நின்றுபோனது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.தன்னுடைய திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனதற்கான காரணத்தை அவர் கூறுகையில், “நான் திருமணம் செய்துகொள்ள இருந்த அந்த நபர், என்னிடம் சினிமாவில் நடிப்பதை கைவிடும்படி கூறினார். நடிப்பதை கைவிடுவதற்கு பதிலாக திருமணத்தையே கைவிட்டேன். அதனால் தான் திருமணம் நின்றுபோனது. நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன்.எனக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பில் கிடைக்கவில்லை என்றாலும், எனக்கு பொருந்தும் கதாபாத்திரங்களில் நடிப்பேன். ஆனால், எந்த காரணம் கொண்டும் சினிமாவிலிருந்து விலக மாட்டேன். என்னுடைய கடைசி மூச்சுவரை சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பேன்” என்று தெரிவித்திருந்தார் த்ரிஷா. - மணி #சினிக்கூத்து சினிமா சேதி #சினிமா சினிமா. From X சமூக ஊடக பதிவு இருந்து
10 shares

More like this