தோணிபுரத்து அம்மை ஆச்சியின் அழகு செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 81வது திருத்தலம் திருத்தோணிபுரம் அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர் மரம்: பவழமல்லிபிரம தீர்த்தம் பாடல் 1 சாதாரி சங்கமரு முன்கைமட மாதை ஒரு பாலுடன் விரும்பி அங்கமுடன் மேல் அறவ அணிந்து பிணி தீர அருள் செய்யும் எங்கள் பெருமான் இடம் எனத்த குமுனை கடலின் முத்தந் துங்கமணி சிப்பிகள் கரைக்கு வரு தோணிபுர மாமே. பொழிப்புரை: முன்கையில் சங்குவளையல் அணிந்த உமா தேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி, எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து, தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள் புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலை வீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும், இரத்தினங்களும், சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும். குறிப்புரை: சங்கு அமரும் - சங்கு வளையல் பொருந்திய. ( முன்கை ) மடமாதை - இளமைமாறாத உமாதேவியாரை. உடன் ஒருபால் - தன்னோடு உடம்பின் ஒருபாகமாக. விரும்பி - விரும்பி அமர்த்தி. அங்கம் - எலும்பை. உடல்மேல் - உடம்பின்மீது. உற - பொருந்தும்படி, அணிந்து. பிணிதீர - மும்மலப் பிணிப்பு நீங்கும்படி. அருள்செய்யும் எங்கள் பெருமான் இடம். முனைக்கடலின் - அலை முனைந்து வீசுதலையுடைய கடலினின்றும். முத்தம் - முத்துக்களும். துங்கம் - உயர்ச்சி பொருந்திய. மணி - இரத்தினங்களும். இப்பிகள் - சங்குப் பூச்சிகளும். கரைக்கு வருகின்ற தோணிபுரம். #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
8 shares

More like this