𝙆𝙖𝙮𝙖𝙡 𝘼𝙗𝙗𝙖𝙨
478 views • 23 hours ago
ஐந்து ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் த வெ க அரசு - காயல் அப்பாஸ் கண்டனம் !
காயல் பட்டிணம் .ஆக 11
ஐந்து ஆயிரம் குடும்பங்களை 21 நாளில் வெளியேற்ற துடிக்கும் த வெ க அரசுக்கு -
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருப்பத்துர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்று கரையோர குடியிருப்புகளில் 5000 க்கும் மேற் பட்ட குடும்பங்கள் சுமார் நாற்பது ஐந்து ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அப்படி இருக்க திடீரென நகராட்சியிலிருந்து வந்து அனுமதியற்ற ஆக்கிரமிப்பு பொது நிலம் ஆகவே 21 நாளில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என ஒட்டிய நோட்டீஸால் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது .
அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதற்கு முன் மாற்று இடங்கள் அல்லது வீடுகள் கொடுக்க பட்டிருக்கிறதா இல்லை ? மேலும். எந்தவித மாற்று ஏற்பாடு செய்யாமல் மக்களின்
குடியிருப்புகளை காலி செய்ய வைப்பதனால் ஐந்து ஆயிரத்திற்க்கும் மேற் பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறி விடும்.என்பதை த வெ க அரசு மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே : பொது மக்களின் நலனை கருதி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பதை த வெ க அரசு கை விட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார். #முக்கிய செய்தி
14 likes
12 shares