S.ANTHONY✝️YESUMARY
816 views • 16 hours ago
மரியாளின் மாசற்ற இருதய வணக்க மாதம்*
ஆகஸ்ட் 18
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள். உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்
ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அர்ச். பெர்நார்து தேவமாதாவை நோக்கி வேண்டின ஜெபம்:
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து. உம்முடைய உபகார சகாயங்களை இரந்து, உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக, ஒருபோதும் உலகத்தில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! என் தயையுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது, பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக்கொண்டு, உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.(300 நாள் பலன்)
நிலையான புகழுக்குரிய, தூய்மைமிகு நற்கருணைக்கு, எல்லா காலமும் ஆராதனையும், புகழும் மாட்சியும் உண்டாகக்கடவது.
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
13 shares