A Mohan Raj
2K views 2 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து மூத்த நாயனார் அருளிய திருஇரட்டை மணிமாலை* *பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள கபிலதேவ நாயனார் இயற்றிய மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, விநாயகப் பெருமானைப் போற்றும் மிகத்தொன்மையான சிற்றிலக்கியமாகும். வெண்பா மற்றும் கட்டளைக்கலித்துறை பாவகையில் 20 பாடல்களைக் கொண்டு, விநாயகரின் அருளையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் இந்நூல், சைவ சமயத்தில் தனித்துவம் வாய்ந்தது.* பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து மூத்த நாயனார் அருளிய திருஇரட்டை மணிமாலை* வெண்பா திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை. 1 கட்டளைக் கலித்துறை கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில் எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும் பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத் திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே. 2 வெண்பா அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம் இடியவலோ டெள்ளுண்டை கன்னல் - வடிசுவையில் தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே வாழ்வானை வாழ்த்தியே வாழ். 3 கட்டளைக் கலித்துறை வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டைஎல் லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான் வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே. 4 வெண்பா விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து. 5 கட்டளைக் கலித்துறை கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க் கினியன் இனியொரு இன்னாங் கிலம்எவ ரும்வணங்கும் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே. 6 வெண்பா யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார் மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என் உள்ளக் கருத்தின் உளன். 7 கட்டளைக் கலித்துறை உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத் திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக் களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே. 8 வெண்பா கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் பணங்கொண்ட பாந்தட் சடைமேல் - மணங்கொண்ட தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம். 9 கட்டளைக் கலித்துறை போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல் நாகபந் தத்தந்த நாளம் பிறையிறை யான்பயந்த மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர் ஏகதந் தத்தெந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே. 10 வெண்பா ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை முக்கட் கடாயானை முன். 11 கட்டளைக் கலித்துறை முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத் தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மேயுமையாள் தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே. 12 வெண்பா சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட் டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர் பண்டத்தான் தாள்பணியாப் பண்டு. 13 கட்டளைக் கலித்துறை பண்டந்த மாதரத் தானென் றினியன வேபலவும் கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூருணர்வில் கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றை யொற்றை வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே. 14 வெண்பா வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய் தாட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள் காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை வேந்தா உடைத்தமரர் விண். 15 கட்டளைக் கலித்துறை விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் ணுஞ்செய் வினைப்பயனும் பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமா கண்ணுதல் நுங்கிய நஞ்சம்உண் டார்கரு மாமிடற்றுப் பெண்ணுதல் நும்பிரி யாவொரு பாகன் பெருமகனே. 16 வெண்பா பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர வருவான்தன் நாமம் வரும். 17 கட்டளைக் கலித்துறை வருகோட் டருபெருந் தீமையும் காலன் தமரவர்கள் அருகோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தஅன்பு தருகோட் டருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும் ஒருகோட் டிருசெவி முக்கட்செம் மேனிய ஒண்களிறே. 18 வெண்பா களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன். 19 கட்டளைக் கலித்துறை நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேஎன்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே. 20 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
23 likes
41 shares

More like this