ShareChat
click to see wallet page
search
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️ஜோதிட பரிகாரங்கள் ஹயக்ரீவர்: இவர் மகாலட்சுமியைத் தனது இடது மடியில் அமர்த்தியவாறு 'லட்சுமி ஹயக்ரீவர்' ஆக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த வடிவத்தை வழிபடுவது கல்வியோடு செல்வத்தையும் ஒருங்கே தரும். லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதியாக விளங்குபவள். கல்வியின் அதிபதி ஹயக்ரீவர். அதனால், லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வணங்கினால் கல்வி + செல்வம் ஆகிய இரண்டு வரங்களும் கிட்டும் என்பது ஐதிகம். ஹயக்ரீவருக்குச் சாற்றப்பட்ட ஏலக்காய் மாலையிலிருந்து ஏலக்காய்களை எடுத்து, அதனைப் பொடி செய்து பாலில் கலந்து குழந்தைகளுக்குப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் பக்தர்களிடையே உள்ளது. இது குழந்தைகளின் அறிவாற்றலையும் சுறுசுறுப்பையும் மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களில் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவிப்பது கல்வியோடு சேர்த்து குடும்பத்தில் செல்வச் செழிப்பையும் அமைதியையும் கொண்டுவரும். ஹயக்ரீவர் பிரார்த்தனை or மூல மந்திரம் உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ வாகீஶ்வரேஶ்வர | ஸர்வ வேதமயாசிந்த்ய ஸர்வம் போதய போதய ஹயக்ரீவ || பொருள்: "சாம வேதத்தின் இன்னிசையாகவும் (உத்கீதம்), ஓங்காரத்தின் வடிவமாகவும், அனைத்துக் கலைகள் மற்றும் கல்வித் தெய்வங்களுக்கெல்லாம் ஈஸ்வரனாகவும் இருப்பவரே! அனைத்து வேதங்களின் வடிவமானவரே! மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவரே! ஓ ஹயக்ரீவா, எனக்கு அனைத்து அறிவையும், ஞானத்தையும் போதித்து அருளுங்கள்." #📅பஞ்சாங்கம்✨
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat