சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது - காயல் அப்பாஸ் கண்டனம் ! காயல் பட்டிணம் ஜீலை ::04 சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. துத்துக்குடி மாவட்டம். திருசெந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். முன்னாள் அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன் தூத்துக்குடியில் நடை பெற்ற பொது கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவதூறாக பேசியதாக கைது சர்வதிகாரத்தின் உச்சமாக தான் பார்க்க முடிகிறது. ஏனென்றால் தமிழகத்தில் தி மு க . அ தி மு க ஆட்சி காலங்களில் அரசியல் வாதிகள் மேடையில் பேசும் போது ஆளுங்கட்சிகளுக்கு எதிராக விமர்சனம் மற்றும் அவதூறாக பேசும் பட்சத்தில் சம்பந்த பட்ட, நாடாளு மன்றம் , சட்ட மன்றம் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டிருக்கிறது.மேலும் அவதூறாக பேசியதனால் நாடாளு மன்றம் , சட்ட மன்றம் உறுப்பினர்கள் யாரையும் கைது செய்ததில்லை அன்றே ஆளும் கட்சிகள். ஆனால் இன்று தாவெக ஆட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதா கிருஷ்ணன் அவதூறாக பேசியதனால் பினையில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பது பழி வாங்கும் செயலாகும். ஆகவே.திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார். #முக்கிய செய்தி
11 likes
10 shares

More like this