💙 kalai 💙
2K views 1 days ago
*ஆடி ஸ்பெஷல்* _*_இன்று ஆடிச் செவ்வாய்*__ பொதுவாக செவ்வாய்க் கிழமைகள் அம்பாள் மற்றும் முருகனை வணங்க ஏற்ற நாட்கள். வடமாநிலத்தில் செவ்வாய்க்கிழமையை மிகவும் மங்களகரமான நாளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு மங்கல்வார் என பெயரிட்டு அழைப்பார்கள். தமிழகத்தில் ஒரு சாரார் செவ்வாய்க் கிழமையை ஆகாத நாள் என ஒதுக்குவார்கள். செவ்வாய் தோஷ கிரகமோ என்ற பயமே அதற்கு காரணம். உண்மையில் செவ்வாயின் பலம் இருந்தால் தான் நம்மால் வீடு நிலம் வாங்க முடியும். செவ்வாய்க் கிழமையன்று செய்யப்படும் வழிபாட்டுக்கு அதீத சக்தி உண்டு. குறிப்பாக அன்றைய தினம் மாலை 3-4.30 மணிக்குள் செய்யப்படும் ராகு கால பூஜை எல்லாவித தடைகளையும் உடைத்து விடும். நீங்கள் வீடு வாங்குவது குழந்தைகளுக்கு திருமணம் முடிப்பது உள்ளிட்ட விஷயங்களில் அதிக தடைகளை சந்தித்தால் உடனடியாக செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாயும் ராகுவும் மகிழ்ந்து தடைகளை உடைத்து நன்மை வழங்குவர். இந்த நாளில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வது முருகப் பெருமானின் பேரருளை பெற்று தரும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் கூழ் பிரசாதமாக தருவார்கள். இது நோய் தீர்க்கும் சக்தி கொண்டது. அது மட்டுமல்ல! பக்தர்களுக்கு கூழ் தானம் செய்வது மிகப்பெரிய புண்ணியத்தை கொடுக்கும். மறக்காமல் இன்று அம்மன் கோவிலுக்கும் முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது இரட்டிப்பு பலன் தரும். ஆடிச் செவ்வாய் வழிபாட்டை சிறப்புடன் செய்வோமா! நமசிவாய 🤟🤘 #🙏நமசிவாய ஓம்✨
18 likes
5 comments 24 shares

More like this