S.ANTHONY✝️YESUMARY
2K views 10 hours ago
காலை செபம்* _*(ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா)*_ நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே,என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னைப்,பாதுகாப்பாய் வைப்பார். அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள,என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்; அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன். புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே,உமது முகத்தையே நாடுவேன். என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. *(திருப்பாடல் 27 :4 -12 ,14 )* விண்ணக தந்தையே, இந்தப் புதிய நாளிலே நான் எழுந்திருக்கும்போது, இயேசு உருமாறிய மலை, அங்கே தோற்றம் மாறி பிரகாசிக்கும் அவரது முகம், மின்னும் அவரது ஆடைகள், “இவரே என் மைந்தர் , நான் தெரிந்துகொண்டவர் இவரே ; இவருக்குச் செவிசாயுங்கள் ” என்று அறிவிக்கும் உங்கள் குரல், இவை அனைத்தையும் இந்த காலை வேளையில் நான் நினைவில் கொள்கிறேன். இயேசுவே, இன்று நான் உங்களுடன் அந்த மலையில் ஏற விரும்புகிறேன். உங்கள் மாட்சியைக் காணவும், அமைதியான இந்த காலை வேளையில் உங்கள் குரலைக் கேட்கவும், மேலும் என்னுடைய எதிர்கால வாழ்விற்கு என்னை பலப்படுத்தவும், இந்நாளில் உங்களோடு உருமாற விரும்புகின்றேன் . பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைப் போலவே, தூக்கக் கலக்கம் எனும் உலகத்தின் கவனச்சிதறல்களில் என்னை மூழ்க விடாதேயும், உங்கள் உடனிருப்பின் ஒளி என் இதயத்திலும், என் வழியாக, மற்றவர்களின் வாழ்க்கையிலும் பிரகாசிக்க அனுமதியுங்கள். தூய ஆவியானவரே! இன்று என் ஒவ்வொரு அசைவுகளையும் வழிநடத்தும். அதனால் என் வார்த்தைகள், செயல்கள் மற்றும் எண்ணங்களில், நான் கிறிஸ்துவின் மாட்சியை பிரதிபலிக்க திடப்படுத்துங்கள். மீண்டுமாக இயேசுவே! வாழ்க்கைப்பாதையில் நான் இருள்சூழ் பள்ளத்தாக்குகள் வழியாக நடக்கும்போது, நீர் எப்போதும் என்னுடன் மாட்சியுடன் இருக்கிறீர் எனும் தாபோர் மலை தரிசனத்தை எனக்கு நினைவூட்டுங்கள். நீர் எப்போதும் என்னுடன் இருக்கிறீர், என்னுள் இருக்கும் உமது ஒளியை, இருள் ஒருபோதும் வெல்ல விடாதேயும். அப்பா, இந்தப் புதிய நாளுக்காக மீண்டும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் ஒவ்வொரு நொடியிலும் உமக்கு செவிசாய்த்து, இன்று உமது மகிமைக்காக வாழ அருள் தாருங்கள் . ஆமென். #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
37 likes
93 shares

More like this