திருநீற்றுச் சுவடு
947 views • 21 days ago
#🔍ஜோதிட உலகம் 🌍 #பதினெட்டாம்படி கருப்பசாமி 🙏 #ஓம் ஸ்ரீ வேம்படி சங்கிலி கருப்பா #💞காவல் தெய்வம் கருப்ப சாமி 🙏 #⚔கருப்ப சுவாமி🔥 அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் திருக்கதவுகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். 2026 ஆம் ஆண்டிற்கான நடைதிறப்பு விழா ஜூலை 29, 2026 (ஆடி பௌர்ணமி) அன்று மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிக்குள் நடைபெறும்.
ஆடி பௌர்ணமி தினமான அன்று மாலை மங்கள இசையுடன் மூலஸ்தான திருக்கதவுகள் திறக்கப்பட்டு, கருப்பசாமியின் சன்னதிக்கு முன்பாக பதினெட்டு படிகளிலும் பிரம்மாண்ட கற்பூர ஆராதனை காட்டப்படும். இந்த நிகழ்வு சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.
அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நேரடியாகச் சென்று இந்த அரிதான தரிசனத்தைப் பெறலாம்.
16 likes
22 shares