MUTHUPANDIAN RAMKUMAR
3K views 6 days ago
#விநாயகர் #🙏க ண ப தி போ ற் றி விநாயகர் தரிசனம்..* *அமிர்தபுரி நவக்கிரக விநாயகர் கோவில்* விநாயகர் திருமேனியில் நவக்கிரகங்கள். சென்னை திண்டிவனம் நெடுஞ் சாலயல்.. படாளம் கூட்டுச்சால.. (திருமலைவையாவூர், வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில், அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் உள்ளது இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில், நவ கிரகங்களும் இடம் பெற்றுள்ளது, இக்கோயிலின் தனிச்சிறப்பு விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த விநாயகரை வேண்டினால் நவக்கிரகங்களைப் பூஜித்த பலன் கிடைக்கும்என்பது ஐதீகம். இந்த நவக்கிரக விநாயகரரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும், நவக்கிரகத் தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய சிறப்புகள் : இன்று மாலை சங்கடஹர சதுர்த்தி. இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் !! பௌர்ணமி அடுத்த நான்காம் பிறை( நாள்) சங்கடஹர சதுர்த்தி ! இன்று மாலை சந்திரோதயக் காலத்திலே சகல விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு ஆராதனை நடை பெறும் ! "கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி ..கப்பிய கரிமுகன் அடிபேணி ... கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் .... மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ... மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே ... முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே . முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ... அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ....! என திருப்புகழ் பாடி விநாயகரை வழிபட வேண்டிய நாள் ! விநாயகப் பெருமானை வழிபட வாழ்க்கையில் அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கும் ! பிரச்சனைகள் அகலும் ! கடன் நிவர்த்தியாகும் ! தடைகள் விலகி வழி கிடைக்கும் !! சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சகல விதமான தடைகளையும் சங்கடங்களையும் போக்கும் ! நம்மை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் !! "அல்லல்போம்... வல்வினை போம்.. அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்....! போகாத் துயரம்போம்.. லோக மக்களின் கொரோனா எனும் நோயின் துயரம் போம்..! நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்..!!" இன்று விநாயகர் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !! *விநாயகர் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..*
38 likes
39 shares

More like this