#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #விநாயகர் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # தோல்வியா? 12 ராசிகளும் விநாயகருக்கு செய்யவேண்டிய முக்கிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் ஒருவருக்கு தடை, தாமதம் இருக்கிறது என்றால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு சரணடைய கூடிய தெய்வமாக விநாயகப் பெருமானாக இருக்கிறார். அப்படியாக 12 ராசிகளும் விநாயகர் பெருமானுக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம். மேஷம்: இவர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். ரிஷபம்: இவர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும். மிதுனம்: இவர்கள் விநாயகருக்கு எலுமிச்சை பழம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் தடைகள் யாவும் விலகும். கடகம்: இவர்கள் விநாயருக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நல்ல லாபம் உண்டாகும். சிம்மம்: விநாயகருக்கு இவர்கள் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்கின்ற பொழுது நீண்ட காலமாக சந்தித்த காரிய தடை விலகும். கன்னி : இவர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் யாவும் நிறைவேறும். துலாம்: விநாயகருக்கு சாத்துக்குடி அல்லது நார்த்தம் பழத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டு. விருச்சிகம்: விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது இன்பமான வாழ்க்கை கிடைக்கும். தனுசு: விநாயகருக்கு மஞ்சள் பொடி அல்லது தேன் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மகரம்: விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது பொருட்சேர்ப்பை உண்டாக்கும். கும்பம்: இவர்கள் விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யும்பொழுது சகல நன்மைகள் உண்டாகும். மீனம்: இவர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடி மற்றும் இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும்.
11 likes
12 shares

More like this