நஜிராஅமான்
299 views 25 days ago
கடலூர் மாவட்டம் திருச்சோர்புரம் மங்களபுரி ஈஸ்வர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி சிலை வெறும் கற்சிலை அல்ல அது ஒரு இசைக்கருவி இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மீது மென்மையாகதட்டினால் சங்கீதத்தின் அடிப்படை நாதமான சப்த ஸ்வரங்கள் துல்லியமாக ஒலிக்கின்றன ஒரு கர்ச்சிலைக்குள் எப்படிஏழு விதவிதமான அதிர்வுகளை கொண்டு வந்தார்கள் என்று இன்றைய நவீன காலத்திலும் வியக்க வைக்கும் அறிவியல் அதிசயம் இசை துறையில் சாதிக்க நினைப்பவர்கள் குரல் வளம் பெற விரும்புபவர்கள் மற்றும் இசைக்கருவி பயிலும் மாணவ மாணவியர்கள் இத்தலத்திற்கு வந்து சப்தஸ்வர தட்சணாமூர்த்திக்கு விசேஷ பூஜை செய்து வழிப்படுகின்றனர் இவரை வணங்கினால் கலைகளின் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதிகம் அகத்தியர் தனது கைத்தடம் பதிய மனலில் படித்த சிவலிங்கம் சிவனுக்கு மஞ்சள் சாற்றி செய்யப்படும் அபூர்வ வழிபாடு கடல் சீற்றத்தால் மணலில் புதைந்து மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட தொன்மையான ஆலயம் அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோர்புரம் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் #ஆன்மீக தகவல்கள்
1 share

More like this