Target TNPSC 2026
498 views 15 hours ago
ஜூலை 23, பால கங்காதர திலகர் விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் 1856ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார். ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலைப் போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார். முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் (1920) மறைந்தார். #target #tnpsc #TARGET TNPSC #Target TNPSC 2026 #targettnpsc2026
18 likes
8 shares

More like this