🌿 இன்றைய தேவ வார்த்தை 🌿
📖 வேதாகம வசனம்
"உன் சந்ததி பூமியின் தூள்போலிருக்கும்; நீ மேற்கும் கிழக்கும் வடக்கும் தெற்கும் பரவுவாய்; பூமியின் சகல வம்சங்களும் உன்னாலும் உன் சந்ததியாலும் ஆசீர்வதிக்கப்படு."— ஆதியாகமம் 28:14
🎙️ தேவ செய்தி
அன்பானவர்களே,
இன்று உங்கள் வாழ்க்கை சிறியதாகவும் பலவீனமாகவும் தோன்றலாம்.
உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கவலைப்படலாம்.
ஆனால் கர்த்தர் யாக்கோபுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை இன்று உங்களுக்கும் நினைவுபடுத்துகிறார்.
“நான் உன்னை விரிவாக்குவேன், ஆசீர்வதிப்பேன்” என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
இன்று மனிதர்கள் உங்களை மறந்தாலும், தேவன் உங்களை மறக்கவில்லை.
சிறிய ஆரம்பத்தை பார்த்து மனம் உடையாதீர்கள்.
கர்த்தர் உங்கள் வாழ்க்கையை எல்லாத் திசைகளிலும் விரிவாக்கப்போகிறார்.
உங்கள் குடும்பம், உங்கள் பிள்ளைகள், உங்கள் ஊழியம், உங்கள் தொழில் — இவைகளின் மேல் தேவனுடைய கிருபை பெருகும்.
தடைபட்ட கதவுகள் திறக்கும்.
நீண்ட நாட்களாக காத்திருந்த ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும்.
இன்று
விசுவாசத்தோடு சொல்லுங்கள்:
"கர்த்தர் என்னை ஆசீர்வதித்து விரிவாக்கப்போகிறார்!"
🙏 கர்த்தர் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதத்தின் சாட்சியாக மாற்றுவாராக. ஆமென்.
--✍️சகோ சுதாகர் காட்வின்
🔥ஹெப்ரான்வ ஜெப ஊழியங்கள்
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #நம்பிக்கையுடன் வாழ்த்து செய்தி


