ShareChat
click to see wallet page
search
*கல்வியொழுக்கம்*! ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும், சுற்றம் என்பது துகள் அறு கல்வி, ஏழை என்பவர் எழுத்தறியாதவர், தைக்கக் கற்றவன் சமர்த்தன் ஆவான், நையக் கற்பினும் நொய்ய நன்கு உரை, கொற்றவன் தன்னிலும் கற்றவன் உயர்ந்தவன், தகும் எழுத்தை அறிந்தவன் தலைவன் ஆவான், காவலனே எனினும் கணக்கை ஓர்ந்து அறி! நூல்: கல்வியொழுக்கம் (வெவ்வேறு வரிகள், நூலில் உள்ள வரிசையில் இங்கே இல்லை) பாடியவர்: ஔவையார் (இந்த வரிகளுக்கு உரை அவசியமில்லை. எனினும், வழக்கம்போல, சாத்திரத்துக்காக இது) 1. ஒருவர் எத்தனையோ செல்வங்களைச் சேர்த்திருக்கலாம். ஆனால் அவற்றுள் மிகச் சிறந்தது, கல்விதான் 2. செல்வம்மட்டுமில்லை, அவர்களுக்குச் சிறந்த சொந்தமும், அந்தக் கல்விதான் 3. கற்காத ஒருவன், எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழைதான் 4. விஷயங்கள் மனத்தில் ஊன்றும்படி கற்றுக்கொண்டவன்தான் சமர்த்து.(வெறுமனே மனப்பாடம் செய்கிறவன் அசடு ) 5. நன்கு படித்து உணர்ந்துகொள், அப்புறம் அதைப் பிறருக்குப் புரியும்படி விளக்கிச் சொல் (அப்போது அது உன் மனத்தில் இன்னும் அழுத்தமாகப் பதியும்) 6. ஒரு நாட்டின் அரசனைவிட, கல்வி கற்றவனே உயர்ந்தவன் 7. சரியான விஷயங்களைப் படித்து உணர்ந்தவன்தான் தலைவன் ஆவான் 8. நீ நாட்டுக்கே காவலனாக இருந்தாலும் சரி, கணக்கை ஒழுங்காகப் படி துக்கடா இந்த எட்டில் எனக்கு ரொம்பப் பிடித்தது #4, அதை நாமக்கல்லுக்கு அனுப்பிவைத்தால் நலம். #8பற்றி எனக்கொரு சந்தேகம், ஔவையார் ‘கணக்கை ஒழுங்காகப் படி’ என்கிறாரா, அல்லது ‘கணக்கு இல்லாமல் கண்டபடி செலவு செய்யாதே’ என்கிறாரா? இந்த நூல் முழுவதும் கல்வி பற்றியது என்பதால் முதல் விளக்கத்தை உரையாகத் தந்துள்ளேன் ஔவையின் ‘கல்வியொழுக்கம்’ என்ற இந்த நூல் அதிகப் பிரபலம் ஆகாதது. கிட்டத்தட்ட தொலைந்துவிட்ட நிலையில் இருந்த இதனைக் கண்டுபிடித்து மறுபிரசுரம் செய்தவர், சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள் ‘கல்வியொழுக்கம்’ நூலில் மொத்தம் 86 வரிகள் நமக்குக் கிடைத்துள்ளன இன்னும் தொலைந்தவை எத்தனை வரிகள் என்று தெரியவில்லை 🚩🕉🪷🙏🏼 #அவ்வையார் பொன்மொழிகள் #ஔவையார் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
அவ்வையார் பொன்மொழிகள் - ஈட்டியநற்பொருள் எழுத்தே ஆகும் சுற்றம் என்பதுதுகள் அறுகல்வி ஏழை எனபவர எழுத்தறியாதவர் ஔவையார் செய்த அருளிச் கல்வியொழுக்கம் ஈட்டியநற்பொருள் எழுத்தே ஆகும் சுற்றம் என்பதுதுகள் அறுகல்வி ஏழை எனபவர எழுத்தறியாதவர் ஔவையார் செய்த அருளிச் கல்வியொழுக்கம் - ShareChat