Makkal Mugam
566 views • 1 days ago
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பாக 13-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான மாபெரும் பேரணி காகிதப்பட்டரை சீனிவாச திரையரங்கம் அருகில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட போராட்ட குழு தலைவர் எஸ் கே விஜயகுமாரன் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்டத் துணைத் தலைவர்கள் சதீஷ், பி. விஜயகுமார், மற்றும் மாவட்ட இணை செயலாளர்கள் ரவி, வினோத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மாவட்டச் செயலாளர் மாநில முன்னாள் துணைத் தலைவர் பி தர்மலிங்கம் சிறப்புரையாற்றினர்.
அனைத்து சங்க பணியாளர்களும் பயனடையும் வகையில் புதிய ஊதிய நிர்ணயம் செய்வதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்துக!
பணியாளர்கள் பணி ஓய்வு, ஓய்வு கால பலன்களை வழங்குவதில் சட்டத்திற்கு முரணாக ஏற்படுத்தப்படும் தடைகளை கைவிடுக!
» ஓய்வூதியத்தை உயர்த்தியும், இதுவரை வழங்கபெறாத அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ஆணை வழங்கீடு!
» தாயுமானவர் திட்டத்தில் ஏற்படும் நடைமுறை சிரமங்களை களைந்திடுக!
என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேர் இந்த பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2 likes
9 shares