#😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #உற்சாக பானம் #பொழுது போக்கு *இன்றைய சிந்தனை* ( 30.07.2026 ) ................................................ *ஒத்திப் போடாதீர்கள்..* .............................................. ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்தி வைக்கின்றோம்... நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்தி வைக்கின்றோம்... நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒத்தி வைக்கின்றோம்... வெற்றி பெறவியலாது என்றெண்ணி ஒத்தி வைக்கின்றோம்... சோம்பேறித்தனத்தின் காரணமாக ஒத்தி வைக்கின்றோம்... உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கின்றது என்பதற்காக ஒத்தி வைக்கின்றோம்.. துயரின் காரணமாக ஒத்தி வைக்கின்றோம்.. இப்படிக் காரணங்களை தேடித் தேடி ஒத்தி வைக்கின்றோம்... இப்படி ஒத்திப் போடுவதற்கு காரணம் தேடும் நாம், நம் வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்தி போடுவோமா...? எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட, எதாவது ஒரு முடிவை எடுக்கலாம், அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சித்தோம் என்ற அளவிளவாவது மகிழலாம்... சில நேரங்களில் முடிவெடுக்க இயலாமைக்கு, இதுவா...? அதுவா...? இப்படிச் செய்யலாமா...? அல்லது அப்படிச் செய்யலாமா...? என்ற குழப்பமே காரணம். ஒரு தெளிவான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம்... கிரக்கே கார்ட் என்பவர் Either -or என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளார். அதில் அவர் சொல்கிறார்... ''முடிவெடுக்கும் தருணத்தில் ஆலோசிப்பது நாம் செயல்படுவதை தள்ளிப் போட வைக்கிறது...!'' என்று... *ஆம் நண்பர்களே...!* "ஒன்றே செய்யின் அன்றே செய்" என்பது நம் முன்னோர்களின் முதுமொழி..? இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள், நாளைய வேலையைக் கூட இயன்றால் இன்றே செய்யுங்கள்; ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளை என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்... நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பதல்ல, நம் சோம்பேறித்தனம் தான் காரணம்...! வெற்றி பெற்றவன் காரணத்தைத் தேடுவதில்லை...! காரணத்தை தேடுபவன் வெற்றி பெறுவதில்லை...!! -உடுமலை சு. தண்டபாணி ✒️ 🌹🌹🌹🙏🏻💐💐💐💐💐💐💐
13 shares

More like this