Jayakannan
600 views 16 hours ago
ஒரு கிரகம் 6,8,12 இல் மறைவு, நீச்சம், அஸ்தங்கம், கிரகணம் இப்படி ஏதேனும் ஒரு வகையில் வலு இழந்த நிலையில் இருந்தாலும். ஜாதகருக்கு மட்டுமே அது கெடுதலை தரும்... ஆனால்.... தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரிய கெடு பலன்களை செய்யாது. ஆனால்.... ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் வர்க்கோத்தமம் போன்ற வகையில் இருந்து பாபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் அதிக கெடுபலன்கள் செய்யும் லக்னாதிபதி பாதிக்கப்பட்டிருந்தால் தனக்கே கூட அது கெடுதலாக முடியும். அதாவது ஒரு கிரகம் சாதாரணமாக வலு இழந்த நிலையில் இருக்கும்போது. கையில் ஆயுதம் இல்லாத ஒரு பலவீனமான மனிதனைப் போல இருக்கும். அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை. அதே சமயம் .... ஒரு கிரகம் வலுவுடன் இருந்து பாவ கிரக சேர்க்கை பார்வை பெறும் பொழுது... அதன் தசா புத்தியில்... கையில் அதிநவீன ஆயுதமும், பெரும் அதிகாரமும் கொண்ட ஒரு நபர்... தீயவர்களின் கையில் சிக்கி தீயவர்களுக்கு சாதகமாகவும். தீய வழிகளில் சென்று சக்தியை பயன்படுத்துவதற்கும். மட்டுமே பயன்படுத்த அது உதவும். இதனால் ... அந்த கிரகம் தனது தசா புத்தி காலங்களில் மிகப்பெரிய அளவில்... தான் கெடுவது மட்டுமல்லாமல்.... தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கெடுபலன்களை தரக்கூடியதாகவும் அச்சுறுத்தல் தரக்கூடியதாகவும் ஆபத்துகளை விளைவிக்க கூடியதாகவும் மாறும். சுருக்கமாக.... ஒரு கிரகம் சாதாரணமாக வலுவிழந்த நிலையை விட .. அதிக பலம்பெற்று தீய கிரகத்தின் பார்வை சேர்க்கை உள்ள நிலையே... மிக மிக அதிக ஆபத்தை விளைவிக்கும். என்கிற அடிப்படையில் இது செயல்படும். அதாவது.. உங்களுடைய புரிதலுக்காக... அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் மனிதர்களில்... ஒரு சிலர்.. மெத்த படித்தவர்களாகவும் வசதி படைத்தவர்களாகவும் அதிகாரம் படைத்தவர்களாகவும் இப்படி உயர்ந்த இடத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும்.... அவர்களால் .... அவர்களைச் சார்ந்தவர்களுக்கும். சமுதாயத்திற்கும். நன்மை நடக்காமல் மாறாக,.. கொடிய தீமை நடப்பது போல் ஆகும். அதேபோல... பரம ஏழையாக இருந்தாலும். படிக்காத நபராக இருந்தாலும். அனைத்து துன்பங்களையும் தனக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு... யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல்.. தான் உண்டு தன் வேலை உண்டு ... என்று இருப்பவர்களாகவும். அதே சமயம் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கெடுதல் செய்யக்கூட வலு இல்லாதவர்களாகவும் இருப்பவர்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கவனித்து இருப்போம்..... இவை அனைத்தும்... மேற் சொன்ன அமைப்பினாலாயே நடப்பதாகும். குறிப்பு: உதாரணங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக சொல்லப்பட்டது மட்டுமே... உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
14 likes
14 shares

More like this