அம்பகத்தால் கொல்லாதடி! 50,
https://pratilipi.app.link/fPEgGKzXj4b
"என்ன இந்த பக்கம்.." கழுத்தில் மீசை உரச தன் பின்னோடு அணைத்த வாக்கில் ஒட்டி நின்ற கள்ளனை கண்ணாடி வழியே காண, அவனும் தான் கண்ணாடியில் பிரதிபலித்த அவள் அழகினைக் கண்டான்.
"உரிமை உள்ளவன் எந்த பக்கத்துல இருந்து வேணாலும் வருவான் டி.. ஆமா அம்மணி எதுக்கு இன்னும் இதையெல்லாம் கலைக்காம நிக்கிறீங்க.. எனக்காக தானே.." அவள் கன்னத்தில் இருந்த சந்தனம் மீது தன் கன்னம் வைத்து உரச,
"ஆமா ஆமா நெனப்புதான், ப்ச் என்ன பண்ற தள்ளு.." கன்னத்துக் குறுகுறுப்பில் தள்ள முயல, அவளின் அடுத்த கன்னத்திலும் தனது மற்றொரு கன்னத்தைப் பதித்து உரசியவன்,
"அதெல்லாம் ஏகப்பட்ட நெனப்பு கெடக்கு.. நீ எத சொல்ற, தெளிவா சொல்லு டி.." இப்போது அவளை தன் புறம் திருப்ப, வைஷ்ணவி முகத்தில் இருந்த சந்தனம் அவனது தாடி கன்னங்களை அழகு படுத்தி இருந்தது. #hot romance #love romance


