மனிதர்களுக்கு வணக்கம். யாம் இணையதள போராளிகள்.
பலரும் எம்மிடம் கேட்பது இந்த தேர்தலில் யார் வென்று ஆட்சி அமைப்பார்கள் என்பதுதான், யாம் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தி.மு.க தான் ஜாயின்ட் கவர்னன்ஸ் கவுன்சிலால் தேர்வாகியுள்ளது என்று கூறியிருந்தோம். அதோடு சென்ற வருடம் ஜீன் மாதத்தில் யாம் தான் முதல் முறையாக தி.மு.க கூட்டணி 180+ தொகுதிகள் வெல்லும் என்ற முன்னறிவிப்பையும் செய்தோம். அதன் பின் அணைத்து ஊடகங்களும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் அதனை வலிந்து உங்களிடம் திணித்தது. தற்போதும் அவற்றையே முன்மொழிகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால் த.வெ.க தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க வின் உளவு ஏஜெண்ட்டும் காங்கிரஸின் உளவு ஏஜெண்ட்டும் ரகசிய பேரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனிடிப்படையில் இனிகோ இருதயராஜ் மற்றும் விஜய் இடையே ஒரு உடன்படிக்கை பேரம் நடக்கிறது. அந்த பேரத்தின் அடிப்படையில் விஜய்க்கு திருச்சி கிழக்கை விட்டுக்கொடுத்து இனிகோ இருதயராஜ் தோற்று, விஜயை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதே அந்த பேரம். இது தற்போது கிடைத்த உளவுத்தகவல். இந்த பேரம் படிந்ததா இல்லையா என்பது பற்றி தீர்க்கமான தகவல் கிடைக்கவில்லை.
இருப்பினும் தற்போது அரங்கேறி வரும் கள சூழலை எடுத்துரைத்து உங்களை யாம் எப்போதும் எச்சரிக்கை செய்வது எமது கடமை. அந்த கடமையில் இருந்து தவறியதில்லை. ஜனநாயகம் என்பது மாயை. நீங்கள் செலுத்தும் ஓட்டு என்பது உங்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஆயூதமே அன்றி வேறில்லை. சிந்தியுங்கள். நன்றிகள் பல. #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி #தமிழ்நாடு அரசியல்


