ரவிசங்கர் ராஜா, ஆரணி
🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏
🌹தியானம் என்றால் என்ன ? அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை.
ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.
சிறுவனிடம், " நான் எப்போ ' ம் சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ
" ம் "' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.
சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.
மகரிஷியின் " ம் " க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சறறு பின் " ம் " சொன்னார் ரமணர்.
அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது " ம் ' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.
புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா ' ம் ' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.
எதிர்பாராத ஒரு நொடியில் ' ம் சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.
‘இரண்டு ' ம் ' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?’ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி
.அப்பனே அருணாச்சலா 🌹
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻🙇🏻🙇🏻
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய
பகவான் ரமண மகரிஷி அவர்களின் எளிமையை கண்டு வியக்காதவர்கள் உளரோ.குருவே சரணம்
ஒரு முறை ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் பொழுது ,அதை அவரின் தொண்டர் ஒருவர் மேற்ப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாராம் ,அப்போது வெயில் காரணமாக ,காலில் செருப்பும் ,தலையில் முண்டாசும் கட்டி இருப்பாராம்
ஆன்மீக முன்னேற்றத்திற்க்காகத் தான் அனைவரும் அவரை அணுகி இருக்கிறார்கள் ,இந்த தொண்டர் சேவை பொருட்டு அவருடன் ,அவருடைய ஹாலில் இருப்பது தடை படுவதை நினைத்து தானோ ,ஒரு நாள் ,ரமணரே இவரை நோக்கி வந்தாராம் ,
வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த அந்த தொண்டர் ,திடீரென்று ==குரு--- தன் அருகில் வருவதை பார்த்து ,குரு முன்பு காலில் செருப்பு அணியக்கூடாது என்று நினைத்து ,,செருப்பை கழற்றி விட்டு --தலை முண்டாசையும் அவிழ்த்துள்ளார் ,,அதற்க்கு ரமணர் "இயல்பாக எப்படி இருக்கிறாயோ அப்படி இருந்தால் உன் அருகில் வருவேன் ,இது எல்லாம் தேவையற்றது ""என்று சொன்னாராம
என்ன ஒரு எளிமையான உபதேசம் !!!
அப்பனே அருணாச்சலா 🌹
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻🙇🏻🙇🏻
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள்