Makkal Mugam
521 views 4 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஜெயந்தியை முன்னிட்டு, சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு விழா! *********************************** வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஸ்ரீசக்திஅம்மா அவர்களின் 50-ஜெயந்தியை முன்னிட்டு, ஆலய நிர்வாகத்தின் சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் 108 சித்த மருத்துவர்களை தேர்வு செய்து பாராட்டி கௌரவிக்கும் விழா ஆக.2-அன்று நடைபெற்றது! இவ்விழாவில்,இந்திய உச்ச நீதிமன்ற நீதீபதி அரவிந்த்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி, சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் பரிசப்பொருட்களை வழங்கி கௌரவித்தார்! ஸ்ரீசக்தி அம்மா தனது அருட்பேருரையில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்! சித்த மருத்துவர்.சுந்தரி மேனாள் பல மாவட்டங்களில் இருந்து 108 சித்த மருத்துவர்களை நிகழ்ச்சிக்காக ஒன்றிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது! மேலும்,நாராயணி மருத்துவமனை தலைவர். டாக்டர்.பாலாஜி, டாக்டர்.சுரேஷ்குமார் மற்றும் நாராயணி ஆலய நிர்வாகிகள், இந்திய மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்!
13 likes
14 shares

More like this